05/03/2026
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்ணின் நோன்பு தொடர்பான சட்டம்
1️⃣ தன்னுடைய உடல்நலத்திற்கு பயந்தால்
கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண் நோன்பு காரணமாக தன்னுடைய உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:
அவருக்கு நோன்பை திறப்பது (விடுவது) அனுமதிக்கப்பட்டது.
பின்னர் அந்த நாட்களை மட்டும் கஃழா (قضاء) செய்ய வேண்டும்.
ஃபித்யா (பரிகாரம்) இல்லை.
2️⃣ குழந்தைக்கே பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்
கர்ப்பிணி பெண் கருவில் உள்ள குழந்தைக்கு, அல்லது பாலூட்டும் பெண் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:
நோன்பை திறக்க அனுமதி உள்ளது.
பின்னர் கஃழா (قضاء) செய்ய வேண்டும்.
அதோடு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு மிஸ்கீனுக்கு உணவு (ஃபித்யா) கொடுக்க வேண்டும்.
3️⃣ தன்னுக்கும் குழந்தைக்கும் இருவருக்கும் பயந்தால்
நோன்பு காரணமாக தன்னுக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:
நோன்பை திறக்க அனுமதி உள்ளது.
பின்னர் கஃழா மட்டும் செய்ய வேண்டும்.
ஃபித்யா இல்லை.
ஃபித்யாவின் அளவு
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு “முத்” அளவு உணவு (நம் நாட்டில் பொதுவாக அரிசி போன்ற உணவு) ஒரு ஏழைக்கு வழங்க வேண்டும்.
ஆதார உரை (மூல அரபு உரை)
قال الإمام النووي رحمه الله:
> "الحامل والمرضع إن خافتا على أنفسهما أفطرتا وعليهما القضاء فقط، وإن خافتا على ولديهما أفطرتا وعليهما القضاء والفدية."
📚 المصدر: المجموع شرح المهذب (6/273).