15/02/2026
அன்பே ஒன்று சொல்லவா?
காற்று வீசும் வேளையில்
கடற்கரையில் கதை பேசனும்
அக்கம் பக்கம் பார்த்து
நீயும் முத்த மழை பொழியனும்
சின்ன இடை தீண்ட
நானம் எட்டி பார்க்கனும்
மெல்ல மெல்ல தொட
என் தேகம் எங்கும் கூசனும்
தினம் ஒரு இடம் உன்னுடன்
சேர்ந்தே நடை போடனும்
நெஞ்சோடு உன் கையை
அணைத்தபடி வீதி உலா போகனும்
என் ஆசை எல்லாம் கேட்டு கேட்டு
உன் ஆசை நீயும் சொல்லனும்
ஆயுளுக்கும் இப்படித்தான் இந்த
காதல் கதை வளரனும்
~©️Sulo ~
15/02/2026