09/08/2025
#திருநாவலூர் அருள்மிகு மனோன்மணி அம்மை உடனமர் அருள்மிகு பக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் #ஆடி_சுவாதி #சுந்தரமூர்த்தி_நாயனார் குருபூஜையை முன்னிட்டு 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஐதீகத்தோடு ஐந்து நாள் உற்சவம் நடைபெற்றது.
இதில் முதல் நாள் அருள்மிகு மனோன்மணி அம்மைக்கு சந்தன காப்பு அலங்காரமும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.
இரண்டாம் நாள் சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் நம்பி ஆரூரார் ஜனன உற்சவம் சிறப்பாக நடைபெற்றது அதை தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் உள்வளமாக வந்து அருள் வழங்கினார்...
மூன்றாம் நாள் சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் தடுத்து ஆட்கொண்டு அருள் புரிந்த திருவெண்ணைநல்லூர் வரலாற்று உற்சவம் நடைபெற்றது
நான்காம் நாள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு குண்டையூர் கிழார் நெல் குவியல்களை அளிக்கும் காட்சியும், அதைத்தொடர்ந்து திருமுதுகுன்றம் என்னும் விருதாச்சலத்தில் இறைவனிடம் பொற்காசுகளை வேண்டி அதை மணிமுத்தாறில் போட்டு, திருவாரூர் கமலாலய குளத்தில் எடுத்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து இறைவன் சுந்தரலுக்காக தண்ணீர் பந்தல் அமைத்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து இறைவன் சுந்தரனுக்காக பொதி சோறு வழங்கும் நிகழ்வும், அதைத்தொடர்ந்து மாடவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது.
ஐந்தாம் நாளான ஆடி சுவாதி அன்று 63நாயன்மார் குரு பூஜையும், அதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசி திருத்தலத்தில் முதலை உண்ட பாலினை மிட்ட நிகழ்வும், அதை தொடர்ந்து சுந்தரர் வெள்ளை யானை மீது ஏறி கைலாயம் செல்லும் காட்சியும், சிவாலயத்தில் சுந்தரருக்கு கைலாய காட்சியையும் சிறப்பாக நடைபெற்றது...
இந்த ஐந்து நாள் நிகழ்விலும் ஊர் பொதுமக்களும் சிவன் அடியார்களும் பெருமளவில் திரளாக கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவனின் அருளும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளும் ஒருசேர பெற்றனர்.....
சுந்தர செந்தமிழ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்து இந்நிகழ்ச்சியை இனிதாக நடத்தியதற்கு எங்கள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொள்கிறோம்...
என்றும்
#சுந்தரதமிழ் பணியில்...
#சுந்தரர்_செந்தமிழ்_அறக்கட்டளை