20/05/2020
கொரோனாவால் தனித்து குடும்பத்தோடு இருக்கும் இவ்வேளையில் ஒவ்வொருவர் மனதிலும் எழும் சிந்தனைகள் பல..!
சுயசார்பு, தற்சார்பு பொருளாதாரம் என பேசுகிறோம் ... ஆனால் இப்பொதுமுடக்க நாளிலும் , இயல்பு வேளையிலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயங்களிலும் உலகமயமாக்கலின் பங்கு இருக்கின்றது.. பிறரை சார்ந்து இயங்கும் நிலையில் உள்ளோம்..கைபேசியில் Youtube, Facebook, Whatsapp, Instagram, Swiggy, Google, Ola, Amazon, Tiktok,etc. என நாம் பயன்படுத்தும் அத்தனை செயலிகளும் நம் தினசரி தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம்..இவை அனைத்தும் பிற நாட்டு நிறுவனங்கள். இப்பொழுது இதை நாம் பயன்படுத்துவதற்கு காரணகர்த்தா உலகமயமாக்கலே.. அதன் பயனை இன்று நாம் அனுபவிக்கின்றோம்.
அவற்றை முற்றிலுமாக மாற்ற இயலா நிலை தான் இன்று..
சுயசார்பு பேசும் நாட்டின் பிரதமரும், நம் இளைஞர்களும் அதிகம் சார்ந்திருப்பது தனியாரையே... ! தவறல்ல , வேறு வழியில்லாமல் சிலர்.. நல்வழி அதுவே என சிலர்.. அவ்வளவே !!!
தனியாரை, பிற நாட்டு நிறுவனங்களை வெறுப்பது ஏன்??
வகுக்கப்பட்ட வரையறைக்குள் தான் தன் பணியை செவ்வனே ஆற்றினால் நல்வழியே..!
அதனால் வெறுப்பர் பலர்!
காலமுறை சரியாக பின்பற்றியே தீர வேண்டும்..!
அதனால் வெறுப்பர் பலர்!
காலத்திற்கேற்றார் போல் அறிவும் புதுப்பிக்கப்பட்டு பட்டைதீட்டாவிடில் பணிநீக்கம் உறுதி!
அதனால் வெறுப்பர் பலர்!
இவ்வளவும் தாண்டி பணி குறித்த சமயம் நடந்தேறும் அங்கு..!
அதனால் வெறுப்பர் பலர்
நன்மையென மேற்கூறியவை இருந்தால்
அங்கு மனம் நோகும் தீங்கும் உண்டு
முதலாளித்துவமும் ஓங்கும் என்ற நினைப்பு..!
தொழிலாளர் நலன் பாதிப்படையும் தன்மை - விளைவு Communism,Marxism பேசுவர்.
தொழிலாளர் சட்டமைப்பு, சங்கம் உருவாக்கம்..!
விளைவு இருபுறமும்
குரூரமாய் மனிதத்தன்மையற்ற, விசுவாசத்தை பயன்படுத்தும் முதலாளிகளும் உண்டு
அவர்களை இதன்மூலம் அடக்கலாம்!
மறுபுறம் தொழிலாளர் நலச்சங்கங்களை அற்ப விசயங்களுக்காக பயன்படுத்தி தொழில்முடக்கம் ஏற்படுத்தும் பலர்..!
இருவரும் உண்டு இங்கு...!இவர்களால் பாதிப்படைந்தவரே தற்சார்பு, சுயசார்பு பேசி வருவர்..!
அவ்வாறானால் தனியாரை, பிறநாட்டு நிறுவனங்களை விரும்புவது ஏன்??
அரசு பொதுத்துறை மேல் உள்ள வெறுப்பு!
காலதாமதம் அவர்களின் பணிச்சிறப்பு!
அதிகாரம் அவரவர் விருப்பத்திற்கு பயன்படுத்தும் முறை!
சாதிகளின் மொத்த விளைவிடம் அரசுபொதுத்துறை!
மக்கள் பணி மோசம், மக்களின் காசு விரையம் இவையே மிச்சம் இங்கு!
தற்பெருமை பேசுமிடம்..!
மக்களின் வரிக்காசு 70% இக்கவுரவப் பணியாளர்களுக்கு...!
பணியோ அதில் பாதிதான் நிறைவு
நேர்மைக்கு தீண்டாமை தான் பரிசு அங்கு..!
ஆட்சியாளர்களோ ஒருபடி மேலே சென்று இவற்றை களையெடுக்க தனியாரை கையிலெடுத்தது..!
விளைவு தினசரி பொதுத்துறை ஏலம் !
(தனியாரிலும், அரசுத்துறையிலும் நேர்மையாய் பணியாற்றுபவரை இங்கு நான் குறிப்பிடவில்லை)
பிறகு தற்சார்பு என்பது என்ன..
தனக்கான தேவையை தானே பூர்த்தி செய்து கொள்வது..
தன் திறமைகளை மேம்படுத்துதல், அதன்மூலம் வருவாய் ஈட்ட முயல்.
செய்யும் தொழில் வைத்து மனிதருள் பாகுபாடு கொண்டு சுயசார்பு கொண்டு பண்டமாற்று முறையில் வாழ்ந்தவர் நாம்...
அவ்வாறே இன்றும் இருந்திருந்தால் அவரவர் அந்தந்த தொழிலில் முடிசூடா மன்னராய் இருந்திருப்போம்..
அவற்றிலும் கொண்டு வந்தனர் தாழ்ச்சி முறையை... விளைவு இன்றளவும்..!
ஆங்கிலேயன் கொண்டு வந்தான் சூழ்ச்சி முறையை கல்வி மூலமாக..!
Industrialization - இந்த முறை இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் விட்டு ஊர் சென்று பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கையின் அடித்தளம்..!
கூர்ந்து நோக்கினால் இவையனைத்தும்
நம்மால் தான்..!
ஆம்
மனிதன்!
நம் மனம்!
எங்கோ யாரோ ஒருவன் நினைத்திருந்தால் மாறி இருக்கும் இன்றைய நிலை.. !
உண்மைதான்..!
அதே யாரோ ஒருவன் போல் நீயும் இராதே இனியும்..!
வடக்கன் , அந்நிய நாடு போன்றவற்றை மற...
மனிதனென நினை..!
நினைத்திருந்தால் நடைபயணமாய் செல்ல அனுமதி அளித்திருக்க மாட்டீர் பல ஆயிரம் கிலோமீட்டருக்கு...!
உதவி செய்ய மனமிருந்தும் கற்ற பாடத்தினால் குரூரமாய் அவனுக்கு உதவுவதாய் எண்ணி அம்மனிதனுக்கு உணவு தருவதை selfie எடுப்பதும்,
அவன் புறத்தோற்றம் கண்டு பருகும் குடுவை இருந்தும், பழைய plastic bottle இல் தண்ணீர் தள்ளி நின்று தருவது நவீன தீண்டாமையின் உச்சம்..!
பணத்தையும் பணிநிரந்தரத்தன்மையையும் மேற்கோள்காட்டி பொதுமுடக்கம் என தெரிந்தும் பணியிலிருக்கும் இக்காலத்தவரை விசுவாசமாய் பணி புரிபவரைக்கூட எப்படியாவது பணியிடத்திற்கு வந்தே தீர வேண்டும் என நிர்பந்தத்திற்கு தள்ளும் மனிதத்தன்மையற்ற தனியார் நிறுவனங்கள்!
பணிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை தாரா அதனை வாங்கியதாய் ஊழல் செய்யும் அரசு.
எல்லாமே நாம் தான் நம்மால் தான் என்று அறியவும்.
கொரோனா கொடிய நோய் அல்ல
வஞ்சம், பொறாமை, மனிதத்தன்மையற்றத்தன்மை ,தன்னலம் மட்டுமே அறிந்த மனம் கொண்ட நாம் தான் கொடிய நோய் இவ்வுலகுக்கு, பிறருக்கு..!
தன் உறவுகளுடன் இனிய தருணங்களை பரிமாறி, அன்பு தங்கள் மனதை இளகச் செய்து , மனம் முழுதும் அன்பே ஆட்கொண்டு ,நல் மனிதனாய் மாறி Quarantineக்குப் பிறகு தன்னலம் பிறர்நலம் அறிந்து எப்பணியிலும் ( தனியாரானாலும், அரசு சார்ந்த பணியானாலும், முதலாளியானாலும்,தற்சார்பானாலும்) நேர்மையாய், முழுமனதுடன் பணிபரிந்து இருக்க இடம் , உடுக்க உடை, மூவேளை உணவுக்கு அளவான செல்வம் சேர்த்து உங்களவர்களுடன் நிதானித்து வாழ்க்கையை இனிதாய் கடக்க என்னாலான பகிர்தல் இது எழுத்து மூலமாக....!!!!!
மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது!
சக மனிதனாய் மாற முயலும்
அசோக்
😇