04/02/2023
அலைப்பாயுதே படத்தில்,
ஒரு காட்சியில்,
Poorni Shakthi யிடம்,
ஒரு வேளை காதலோ?? என்று கேட்டதும்,
Shakthi ஒரு நொடி உள்ளுக்குள் Karthik ஐ
நினைத்து ரசித்து விட்டு,
சும்மா பாத்தா காதல் வருமா??
பைத்தியக்காரத்தனம்.. என்பாள்..
Poorni,
பின்ன ஏன் காலைல 8.55 க்கு பாத்தத பத்தி Night 10.30 மணிக்கு பேசிட்டு இருக்க?? என்று கேட்பாள்..
Exactly Yes..
நாம தினமும் ஆயிரம் பேரை பார்க்கிறோம்..
ஆனால்,சில பேரை மட்டும் தான்
திரும்பி பார்க்கறோம்..
அதிலும்,ஒருவரை மட்டும் தான் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம்..
நினைத்துப் பார்த்து உள்ளூற ரசித்து மகிழ்வதில் தானே காதல் அதீத அழகியல் கொள்கிறது..
சாப்பிடும் போது விக்கல் வந்தால்
யாராவது நினச்சிருப்பாங்க ன்னு சொல்லுவாங்க,
ஆனா, இவங்க தான் இருக்கும் ன்னு நமக்குள்ள ஒரு முகம் மின்னலடிக்கும் இல்லையா??
நம் இதழ்கள் தானாய் புன்னகைக்கும் இல்லையா??
நம்மைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் பறக்கும் இல்லையா??
கவிதை எழுத தோன்றும் இல்லையா??
மொழி தெரியா பாடலையும் ரசிக்கத் தோன்றும் இல்லையா??
மிக அழகான ஓவியமாய் அவன்/அவள் முகம் தெரியும் இல்லையா??
அந்த மின்னல்,புன்னகை,பட்டாம்பூச்சி,
கவிதை, ஓவியம் என எல்லாவற்றிற்கும்
ஒரு பெயர்,ஒரு உயிர், ஒற்றைக் காரணம்
காதல் தானே..🦋
Feb - The Month of ❤️