17/04/2026
🚨 உண்மை ஒருபோதும் உறங்காது! உயர்நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைத்த கம்பெனியின் சாயம் வெளுத்தது! 🚨
இன்றைய 'சுப்ரபாதம்' (Suprabhaatham) நாளிதழில் நமது மாபெரும் மக்கள் போராட்டத்தின் உண்மை நிலை செய்தியாக வெளிவந்துள்ளது.
வடகரப்பதியில் எந்த அனுமதியும் இன்றி செயல்படத் துடிக்கும் தனியார் மீன் கழிவு தொழிற்சாலைக்கு, நள்ளிரவில் துர்நாற்றம் வீசும் கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை (KL 02 BV 0288) கிணர்ப்பள்ளம் சந்திப்பில் ஊர் மக்கள் சிறைபிடித்தனர். "எங்கள் கம்பெனியில் வாசனையே இல்லை" என்று நீதிமன்றத்தில் பொய் அறிக்கை கொடுத்தவர்களின் வண்டியில் இருந்து வந்த துர்நாற்றத்தை அங்கு வந்த போலீசாராலும் மக்கள் பிரதிநிதிகளாலும் கூட தாங்க முடியவில்லை! மக்கள் விடிய விடிய நள்ளிரவு முழுவதும் வண்டிக்கு காவல் காத்ததையடுத்து, அந்த லாரியை போலீசார் திருப்பி அனுப்பினர்.
இந்தச் செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ள மிக முக்கியமான சட்டபூர்வமான விஷயம்:
தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி வடகரப்பதி பஞ்சாயத்து நிர்வாகம் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியாது.
பொது மக்களின் சுகாதாரத்திற்கும் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் இதுபோன்ற சூழ்நிலைகளில், தனது சட்டபூர்வமான சிறப்பு அதிகாரத்தை (Discretionary Power) பயன்படுத்தி உடனடியாக கம்பெனிக்கு 'ஸ்டாப் மெமோ' (Stop Memo) வழங்க வடகரப்பதி பஞ்சாயத்து செயலாளருக்கு முழு அதிகாரம் உள்ளது.
உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என ஊர் மக்கள் எச்சரித்துள்ளனர். சட்டம் சாதாரண மக்களுக்குத் தெரியாது என்று நினைத்து காசு சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடம்!
மக்களின் விழிப்புணர்வே நமது பலம்! ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தின் இந்த வெற்றியை அனைவருக்கும் பகிருங்கள்! ✊