10/05/2020
மதுரையில் நாளை முதல் (11.05.2020) இயங்க உள்ள பணிகள் குறித்தும், கடைகள் திறக்கப்படும் நேரங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள அறிவிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன்கீழ், ஊரடங்கு உத்தரவு 24.03.2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர) தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கீழ்க்காணும் பணிகள் நாளை(11.05.2020) முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
1) அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2) பெட்ரோல் பம்புகள் காலை 6.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
3) தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படஅனுமதிக்கப்படுகிறது.
4) அனைத்து நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் 10.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கீழ்க்கண்ட பிற தனிக்கடைகள் 10.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
1)டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2)பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3)உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4)பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5)கட்டுமானப் பொருடகள் விற்கும் கடைகள்
6)சிமெண்ட், ஹார்டுவேர்,சானிடரிவேர் விற்கும் கடைகள்
7)மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
8)மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9)கணினி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
10)வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டுஉபயோகபொருட்கள் விற்கும் கடைகள்
11)மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
12)கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
13)சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை)
14)சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரகபகுதிகளில் மட்டும்
15)மிக்ஸி,கிரைண்டர் பழுதுநீக்கும்கடைகள்
16)டிவி விற்பனை மற்றும் டிவி பழுதுநீக்கும் கடைகள்
17)பெட்டிகடைகள்
18)பர்னிச்சர் கடைகள்
19)சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20)உலர் சலவையகங்கள்
21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22)லாரி புக்கிங் சர்வீஸ்
23)ஜெராக்ஸ் கடைகள்
24)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள்
26)நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27)விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சிமருந்து விற்பனை கடைகள்
28)டைல்ஸ் கடைகள்
29)பெயிண்ட் கடைகள்
30)எலக்ட்ரிகல் கடைகள்
31)ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனைகடைகள்
32)நர்சரிகார்டன்கள்
33)மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34)மரம் அறுக்கும் கடைகள்.
மேலும் இவை தவிர்த்து மாவட்ட பேரிடர் மேலாண்மைகுழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள் ஃ தொழில்கள் பின்வருமாறு.
1.நோட்டுப்புத்தக உற்பத்தி நிறுவனம்.
2.போர்வெல் இயந்திர செயல்பாடு.
3.பேப்பர் மொத்த வணிகம்.
4.பாத்திரக்கடை.
5.புத்தகக்கடை.
6.போட்டோ ஸ்டுடியோ.
7.எழுது பொருள் விற்பனைக்கடை.
முடிதிருத்தும் நிலையங்கள்(சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்;ககூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாககடை பிடிக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதனவசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.