Madurai Nature Cultural Foundation

Madurai Nature Cultural Foundation Creating awareness about Nature & Cultural aspects of Madurai via Public activities & Documentation

பறவைகள் பற்றி அறிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள விரும்புவோருக்காக உருவாக்கப்பட்ட முகநூல் பக்கம்.

மலை அறிதல் - மேலப் பரங்குன்று முன்பதிவு லிங்க்: https://forms.gle/BiyVjBp4te2p9kZz6நாள்: 14.06.2026, ஞாயிறு நேரம்: காலை ...
08/06/2026

மலை அறிதல் - மேலப் பரங்குன்று

முன்பதிவு லிங்க்: https://forms.gle/BiyVjBp4te2p9kZz6

நாள்: 14.06.2026, ஞாயிறு
நேரம்: காலை 07.00 மணி
தொடர்பு எண்: 8903241263, 9940832133

கூடுமிடம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், மொட்டைமலை, பேரையூர், மதுரை

Google Map Location: https://maps.app.goo.gl/hCAvMh27QNEm4fV68

திணை: முல்லை

குறிப்பு:
நிகழ்வு காலை 09.30 மணிக்கு நிறைவடையும். குடிநீர் கொண்டு வாருங்கள். காலை உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. தேவை இருப்பின் காலை உணவு அல்லது சிற்றுண்டி கொண்டு வாருங்கள். நிகழ்வில் பங்குபெற கட்டணமில்லை.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

Hill Walk - MelaparangundruRegistration Link: https://forms.gle/MUUzZpgLDj8hjPzf8 Date: 14.06.2026, SundayTime: 07.00 AM...
08/06/2026

Hill Walk - Melaparangundru

Registration Link: https://forms.gle/MUUzZpgLDj8hjPzf8

Date: 14.06.2026, Sunday
Time: 07.00 AM
Contact: 8903241263, 9940832133
Meeting Spot: Subramaniya swamy Temple, Mottamalai, Peraiyur, Madurai 625703

Google Location: https://maps.app.goo.gl/hCAvMh27QNEm4fV68

Eco Zone: Mullai

Note:
Have fitness to Walk / Event may end at 09.30 AM / Carry Drinking Water & Snacks / Free Entry / Call us over phone for any query.

Organized by:
Madurai Nature Cultural Foundation (MNCF)

மலை அறிதல் - மேலப் பரங்குன்று முன்பதிவு லிங்க்: https://forms.gle/BiyVjBp4te2p9kZz6நாள்: 14.06.2026, ஞாயிறு நேரம்: காலை ...
08/06/2026

மலை அறிதல் - மேலப் பரங்குன்று

முன்பதிவு லிங்க்: https://forms.gle/BiyVjBp4te2p9kZz6

நாள்: 14.06.2026, ஞாயிறு
நேரம்: காலை 07.00 மணி
தொடர்பு எண்: 8903241263, 9940832133

கூடுமிடம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், மொட்டைமலை, பேரையூர், மதுரை

Google Map Location: https://maps.app.goo.gl/hCAvMh27QNEm4fV68

திணை: முல்லை

குறிப்பு:
நிகழ்வு காலை 09.30 மணிக்கு நிறைவடையும். குடிநீர் கொண்டு வாருங்கள். காலை உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. தேவை இருப்பின் காலை உணவு அல்லது சிற்றுண்டி கொண்டு வாருங்கள். நிகழ்வில் பங்குபெற கட்டணமில்லை.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

பெருங்குன்று - மலை அறிதல் நிகழ்வு=================மதுரை இயற்கை பண்பட்டு அறக்கட்டளை சார்பாக பண்பாட்டுச் சூழல் நடை மாதம் ஒ...
19/05/2026

பெருங்குன்று - மலை அறிதல் நிகழ்வு
=================

மதுரை இயற்கை பண்பட்டு அறக்கட்டளை சார்பாக பண்பாட்டுச் சூழல் நடை மாதம் ஒரு ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்நடையில் பல்வேறு துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று, கூடமிடத்தின் புவியியல், தொல்லியல், சூழலியல் செய்திகளை ஆவணம் செய்வர். அவ்வகையில் கடந்த 17.05.2026, ஞாயிறு அன்று காலை பண்பாட்டுச் சூழல் நடையின் 42வது நிகழ்வு மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள தேவன்குறிச்சி மலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வா, பாட்ரிக், தமிழ்தாசன்,; காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் மரு. ஹிமோக்ளோபின், ஜோதிமணி, பாலகிருஷ்ணா, கேசவன், கௌதமா, சூழலியல் ஆர்வலர்கள் நிலா பாண்டியன், லட்சுமி, விளாச்சேரி சதிஷ்குமார், சக்திவேல், கமலேஷ், சீனிவாசன், பெரிய நல்லதம்பி, நீச்சல்காரன் ராஜா, ஹரிபிரசாத் ஆகியோர் பங்கெடுத்தனர். புவியியல் ஆய்வாளர் ஜா. முகம்மது ஹாரிஸ் அவர்கள் மலையின் தோற்றம், தேவன்குறிச்சி மலை பாறைகளில் காணப்படும் கனிமங்கள், அதை கண்டறியும் நுட்பம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் தேவன்குறிச்சிமலையின் தொல்லியல் ஆய்வுகள், கோயில் கல்வெட்டு தரும் வரலாற்று செய்திகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

தேவன்குறிச்சி மலை, ஈஸ்வரப்பேரி கண்மாய் பகுதிகளில் காலை 7 முதல் 11 மணி வரை மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் நிகழ்த்திய பல்லுயிரிய ஆய்வில் தேவன்குறிச்சி மலையில் சுமார் 30 வகை மரங்கள், 50 வகை பறவையினங்கள், 28 வகை வண்ணத்துபூச்சி இனங்கள், 6 வகை ஊர்வன மற்றும் 18 வகை பாலூட்டி வகை விலங்குகள் ஆவணம் செய்யப்பட்டது. புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, நரி, வெருகு, செம்முக குரங்கு, முள்ளெலி, கீரி, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக தேவன்குறிச்சிமலை விளங்குகிறது. தேவன்குறிச்சி மலையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு புலி இருந்தது என்பதன் அடையாளமாக புலியை கொன்ற வீரனின் நினைவாக எடுக்கபட்ட நடுகல் மலையின் அடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது. பல்வேறு பருவ காலங்களில் விரிவாக ஆய்வு செய்தால், தேவன்குறிச்சிமலையின் உண்மையான பல்லுயிரிய வகைமையை அறிந்துக் கொள்ள முடியும்.

தேவன்குறிச்சி மலையில் 1976-77 ஆண்டில் நடைப்பெற்ற அகழாய்வுகளில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவைகளும் கிடைத்துள்ளன.

தேவன்குறிச்சி மலையில் பொந்துபாறை என்னும் புடவில் வரலாற்றுக் காலதிற்கு முந்திய வெண்சாந்து குகை ஒவியங்களும், 2000 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் கொண்ட கற்படுக்கைகளும் காணப்படுக்கிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள சிவன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கல்வெட்டுகள் தமிழக தொல்லியல்துறையால் ஆவணம் செய்யபட்டுள்ளது. மலையின் வடக்கில் உள்ள ஈஸ்வரப்பேரி கண்மாயிலும் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவன் கோயில் கருவறைக்கு பின்புறத்தில் கிபி 10 ஆம் நூற்றண்டைச் சார்ந்த சமணத் தீர்த்தங்கர் சிற்பமும், கோயிலின் கிணற்றில் மகாவீரர் சிற்பமும் காணப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல்லும் மலையடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது.

800 ஆண்டுகள் பழமையான கோயில் கல்வெட்டுகளில் இருந்து தேவன்குறிச்சி மலையின் பெயர் பெருங்குன்று என்றும், அதன் அடிவாரத்தில் இருந்த ஊரின் பெயர் பெருங்குன்றூர் என்றும், ஈஸ்வரப்பேரி கண்மாயின் பெயர் பெரியகுளம் என்றும் அறிந்துக் கொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குவாரி பணிகளால் மலையின் கிழக்கு பகுதி சிதைக்கபட்டுள்ளது.

சுமார் 1050 அடி உயரம் கொண்ட தேவன்குறிச்சி மலை தொல்லியல் அடிப்படையிலும் சூழலியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த மலையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதற்காக 2002-ம் ஆண்டு இயற்றப்பட்ட உயிரியற் பல்வகைமைச் சட்டம் (Biological Diversity Act, 2002) படி தேவன்குறிச்சி மலையையும், ஈஸ்வரப்பேரி கண்மாயையும் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

ஒளிப்படங்கள்: திரு. கௌதமா, பாலகிருஷ்ணா, விஷ்வா, கேசவன், சதிஷ்குமார், கமலேஷ், சக்திவேல், தமிழ்தாசன்



மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை

17/05/2026

பெருங்குன்று (எ) தேவன் குறிச்சி மலை
மலை அறிதல் நிகழ்வு உரை

Hill Walk - PerungundruRegistration Link: https://forms.gle/N3qVewxacPSf88Bn6 Date: 17.05.2026, SundayTime: 07.00 AM Con...
11/05/2026

Hill Walk - Perungundru

Registration Link: https://forms.gle/N3qVewxacPSf88Bn6

Date: 17.05.2026, Sunday
Time: 07.00 AM
Contact: 8903241263, 9940832133
Meeting Spot: Agneeswaran Temple, Thevankurichi, T.Kallupatti, Madurai

Google Location: https://maps.app.goo.gl/dNEaR5JmCWAJRiJ7A

Eco Zone: Mullai

Note:
Have fitness to Walk / Event may end at 09.30 AM / Carry Drinking Water & Snacks / Free Entry / Call us over phone for any query.

Organized by:
Madurai Nature Cultural Foundation (MNCF)

மலை அறிதல் - பெருங்குன்று முன்பதிவு லிங்க்: https://forms.gle/N3qVewxacPSf88Bn6நாள்: 17.05.2026, ஞாயிறு நேரம்: காலை 07.0...
11/05/2026

மலை அறிதல் - பெருங்குன்று

முன்பதிவு லிங்க்: https://forms.gle/N3qVewxacPSf88Bn6

நாள்: 17.05.2026, ஞாயிறு
நேரம்: காலை 07.00 மணி
தொடர்பு எண்: 8903241263, 9940832133

கூடுமிடம்: அக்னீஸ்வரன் கோயில், தேவங்குறிச்சி, தே.கல்லுபட்டி, மதுரை

Google Map Location: https://maps.app.goo.gl/dNEaR5JmCWAJRiJ7A

திணை: முல்லை

குறிப்பு:
நிகழ்வு காலை 09.30 மணிக்கு நிறைவடையும். குடிநீர் கொண்டு வாருங்கள். காலை உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. தேவை இருப்பின் காலை உணவு அல்லது சிற்றுண்டி கொண்டு வாருங்கள். நிகழ்வில் பங்குபெற கட்டணமில்லை.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

நாகமலையில் 86 வகை வண்ணத்துப்பூச்சிகளை அமெரிக்கன் கல்லூரி மாணவரின் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்கன் கல்லூரி ஆ...
02/05/2026

நாகமலையில் 86 வகை வண்ணத்துப்பூச்சிகளை அமெரிக்கன் கல்லூரி மாணவரின் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்கன் கல்லூரி ஆய்வு மாணவி அர்ச்சனா அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி 30.04.2026 அன்று இந்து தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ளது.

நமது பண்பாட்டில் தேர் ------------------மதுரையில் புகழ்மிக்க சித்திரை திருவிழா கலைக்கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர் ப...
30/04/2026

நமது பண்பாட்டில் தேர்
------------------

மதுரையில் புகழ்மிக்க சித்திரை திருவிழா கலைக்கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை "தேர் பார்க்கலாம் வாங்க" நிகழ்வை 25.04.2026 அன்று ஒருங்கிணைத்தது.

தேர் பயன்பாட்டின் தொன்மை குறித்த தேடுதலில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் தேர் குறித்த பல்வேறு தகவல்களை நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா தேவி அறிவு செல்வம் கூறியதாவது:

ஒற்றுமைத் திருவிழாவாக ஊர்கூடி தேரிழுப்பதாக மட்டுமல்லாது, நம் பண்டைய படைப்பாளர்களின் திறன்களை உலகின் காதுகளுக்கு உரக்கச் சொல்கிற ஓர் உயரிய உன்னத அற்புத அழகிய கலை விழாவாகவும் நம்மூர்களின் தேர்த் திருவிழாக்களும், தேர்களும் இருக்கின்றன. தர்கா சந்தனக்கூடு விழா, தூய மரியன்னை சப்பரம் உலா போன்றவை நமது தேர் திருவிழாக்களை நினைவூட்டுகின்றன. குறிப்பிட்ட மதம் கடந்து, அத்தனை மதத்தினரின் உச்ச விழாக்களின் முக்கிய இடத்தை இந்த தேர் வேறுபட்ட பெயர்களில் பிடித்துக் கொண்டு மானுட நேயத்துடன் சமூக நல்லிணக்கமும் என ஆன்மிக அழகு பேசுகிறது.

நாகரீக வளர்ச்சியின் ஒன்றாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வண்டியினை உருவாக்கி இருக்கலாம். கைவண்டியாகவும், விலங்குகளை பழக்கிய பிறகு யானை, மாடு, கழுதை போன்ற விலங்குகளைக் கொண்டும் இதனை இழுத்துச் செல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள். வண்டியிலிருந்தே தேர் உருவாகி இருக்கும். வண்டிகளுக்கு பண்டிகை' என்ற பெயர் இருந்ததை சிந்தாமணி தெரிவிக்கிறது. சக்கரம், பல்லாக்கு, ரதம் எனப் பற்பல வகைகளில் பார்க்க முடிகிறது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்கள் தொன்மையானதாக கருதப்படும் கோவை மாவட்ட குமட்டிப்பதி மலையில் இருக்கும் வெண் சாந்து ஓவியங்களில் தேர் ஓவியம் இடம்பெற்றுள்ளது.

கனமான பொருட்களை எளிதாக நகர்த்த உருளைக் கட்டைகளை (Logs) பண்டைய கால மக்கள் பயன்படுத்தினர். உருளைக் கட்டைகளை வைத்துப் பொருட்களை நகர்த்திய பழங்கால மனிதர்கள், பின்னர் அவற்றைச் சக்கரமாக மாற்றினர். மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரம் சுமார் 5,500 ஆண்டுகள் பழமையானது என அறிஞர்கள் கணித்துள்ளனர். சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது, இது விவசாயம், போக்குவரத்து, தொழில் நுட்பம், மற்றும் குயவர் வேலைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

தொல்குடி மக்களின் சடங்கு முறைகளில் தேர் பயன்பாடு இருந்துள்ளது. மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு புலம் பெயர்ந்து செல்லும் போது பொருட்களை கொண்டு செல்ல வண்டிகள் பயன்ப்படுத்தப்பட்டன. அப்பயன்பாட்டின் நீட்சியாக தேர்கள் உருவாகி இருக்க வேண்டும்.

சங்க காலத்தில் யானைப்படை, குதிரைப்படையுடன் 'தேர்ப்படை' ஒரு மன்னனின் மிகமுக்கியமான பலமாகத் திகழ்ந்தது. மூவேந்தர்கள், வேளிர்கள் பயன்ப்படுத்திய தேர்கள் குறித்த செய்திகளையும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. கடுந்தேர், நெடுந்தேர், பெருந்தேர், திண்தேர், சிறுதேர் என தேர்கள் அவற்றின் அழகு மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்பப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.

மணித்தேர்: இனிய ஓசை எழுப்பும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட, அரசர்கள் பயன்படுத்திய அலங்காரத் தேர்.

கொடுஞ்சி நெடுந்தேர்: தேரின் முன்புறம் 'கொடுஞ்சி' எனப்படும் தாமரை மொட்டு வடிவிலான பிடிமானம் கொண்ட கம்பீரமான தேர் பற்றி பொருநராற்றுப்படை (வரி 163) குறிப்படுகிறது.

திணி தோள் இயல் தேர்: தேரின் கணைய மரத்தைப் (எழு) போன்ற உறுதியான, வலுவான தேரை உடைய சேர மன்னன் குட்டுவன் குறித்து சிறுபாணாற்றுப்படை (49) குறிப்பிடுகிறது.

பொலம்படைத் தேர்: பொன்னாலான அணிகலன்கள் மற்றும் தகடுகள் பதிக்கப்பட்ட வெற்றித் தேர்.

முக்கால் சிறுதேர்: குழந்தைகள் பொன்னால் ஆன சிறிய மூன்று சக்கர வண்டியை உருட்டி விளையாடியதை பற்றி பட்டினப்பாலை (வரி 25) குறிப்பிடுகிறது.

தேரின் சக்கரம் முழு நிலா காலத்து வெண்மதி போன்றது என தேர் பற்றி சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. குயவர்கள் பானை வனைவதற்கு தேர் காலை பயன்படுத்தியதாக இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் தேர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

தேர்களை முறையாக செய்வதற்கு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை ரத சாஸ்திரம் என்கின்றனர். ரதசாஸ்திர விதிகளின் படியே தேர்கள் வடிவமைக்கப்படுகின்றனர். போதிகை, சிகரம், கலசம், கொடி கொண்டு தேர் முழு வடிவம் பெறுகிறது. திருவிழாவின் போது அலங்கார வண்ணம், திரை சேலைகள், மூங்கில்கள், பூக்கள் கொண்டு தயார் செய்கின்றனர். திருவிழா சமயங்களில், கடவுளின் திருவுருவங்கள் இந்தத் தேர்களில் வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

மேலக் கடம்பூர் என்ற இடத்தில் இருக்கும் கோயிலானது தேர் அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது தேர் பயன்பாடு பெரும்பாலாக கோயில்களில் மட்டுமே உள்ளது. அவை திருவிழாவின் பொழுது இறைவனை வீதி உலா வருவதற்காக பயன்படுத்துகின்றனர். இத்தேரில் புராண சிற்பங்கள், பூதகணங்கள், விலங்குகள், என வரிசைப்படுத்தி சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், கூடல் அழகர் பெருமாள் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், போன்ற கோவில்களில் தேர் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யான தேரோட்டம் மாசி மாதத்தில்தான் முதலில் அரங்கேறியது. நாயக்கர் காலத்தில் அது சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வரலாற்றை நினைவூட்டும் விதமாக தேர்கள் இன்று மாசி வீதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயில் தேர்கள் ஒவ்வொரு காலத்திலும் புதுபிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இன்றைய மீனாட்சியம்மன் கோயில் தேர் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர் செய்த பின்பு எஞ்சிய மரக்கட்டையினை கொண்டு சிறு சிறு பொருட்கள் செய்து கோயில் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளனர். தேர் இப்பொழுது தங்கம், வெள்ளியை கொண்டு உருவாக்கப்பட்டு தங்க ரதம், வெள்ளி ரதமாக வீதி உலா வருகின்றன என்று தேவி அறிவு செல்வம் கூறினார்.

பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் பேசிய காணொளி News Tamil 24X7 செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/IC7jvx7iKVs?si=T08da2gS6l4NR5x7

ஒளிப்படங்கள்: திரு. வெங்கட்ராமன் பரணி வெங்கட்

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

தேர் பார்க்கலாம் வாங்கமதுரை தேர் பற்றிய வரலாற்றினை தெரிந்து கொள்ள வாருங்கள்சந்திக்கும் இடம்- தேர் முட்டி, மதுரை, நேரம் -...
25/04/2026

தேர் பார்க்கலாம் வாங்க

மதுரை தேர் பற்றிய வரலாற்றினை தெரிந்து கொள்ள வாருங்கள்

சந்திக்கும் இடம்- தேர் முட்டி, மதுரை,
நேரம் - மதியம் 1-3 pm
25.04. 2026

Contact number 9865377764
( திருமதி. தேவி அறிவுச் செல்வம்)

Address

East Street
Madurai
625020

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Nature Cultural Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share