16/02/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க .ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் நாடாளு மன்ற தொகுதி பரப்பு ரைக் கூட்டம் இன்று மாலை பூந்துறை ரோட்டில் (ஆணைக் கல்பாளையம்) ரிங் ரோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஅவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் , ராஜ்ய சபா எம்.பி. அந்தியூர். ப. செல்வராஜ் அவர்கள், மற்றும் ஈரோடு மாநகராட்சியின் மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், துணை மேயர் V.செல்வராஜ் அவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.