30/01/2026
ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.. ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்... ஒரு குரங்கை 100 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவிச்சனாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு கொடுத்து வாங்குவாங்களான்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை பிடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டுத்தீ மாதிரி பரவ, நிறைய பேர் குரங்கு பிடிக்கிற வேலையில இறங்குனாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டிலேயே இருந்தவங்களும் உடனே குரங்கு பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமேல் வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி..
ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒரு குரங்குக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க...
ஒரு வாரம் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்கை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி. தன் வேலைக்காரனை கூண்டில் இருக்கிற குரங்குகளை எல்லாம் பாத்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி. பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.
அதை பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்கை 700 ரூபாய்க்கு விக்கிறதாக சொன்னானாம். காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினால், எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.
ஒரு குரங்குக்கு 700 ரூபாய் என்று வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகளை வாங்க, ஏழைங்க கடனைஉடனை வாங்கி, கொஞ்சம் குரங்குகளை வாங்கினாங்களாம்.
குரங்குகளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம். யாருமே வரல.. எல்லாரும் அந்த வியாபாரியோட வேலைக்காரனைப் போய் பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க. ஆனால் அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிப் போயிருந்தான்.. அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விற்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க.
இந்த வியாபாரத்துக்கு பேருதான் "ஜியோ ". முதலில் இலவச சேவை கொடுத்தான். பிறகு 500MB free data கொடுத்தான். எல்லோரும் YOUTUBE, Facebook, Twitter, whatsapp, Instagramனு பழகினதும் 24 நாளுக்கு 1 GB 199 ரூபாய் என்கிறான்.. சிலரை மாசத்துக்கு 400 ரூபாய் வரைக்கும் வாங்க வைக்கிறான்.. இதான் குரங்கு வியாபாரம்.. சும்மா இருந்த சிரங்கை சொரிஞ்சு விட்ட கதையா, நிம்மதியா இருந்த நம்மை இன்டர்நெட்டுக்கு அடிமையாக்கி, ஒழுங்கா நல்லபடியா சேவை கொடுத்துக்கிட்டிருந்த BSNL, IDEA, HUTCH, AIRCEL எல்லாரையும் கடன்காரனாக்கி தான் மட்டும் தான் இந்த தொழில்ல நிக்கமுடியும்னு ஆனதுக்கப்புறமா, தன் இஷ்டப்படி விலைய ஏத்துறான் பாருங்க அதுதான் இந்த குரங்கு வியாபாரம்..