MOKKA JOKE MA

MOKKA JOKE MA LIVING IN CHENNAI

ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.. ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்... ஒரு க...
30/01/2026

ஒரு ஊர்ல நிறைய குரங்குங்க வாழ்ந்து வந்துச்சாம்.. ஒரு நாள், ஒரு வியாபாரி அந்த ஊருக்கு குரங்குகளை வாங்க வந்தானாம்... ஒரு குரங்கை 100 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவிச்சனாம். அந்த ஊர் ஜனங்க எல்லாம் அவனை பைத்தியம்னு நினைச்சாங்களாம். யாராச்சும் மரத்துக்கு மரம் தாவிட்டு இருக்கிற குரங்க காசு கொடுத்து வாங்குவாங்களான்னு யோசிச்சாங்களாம். இருந்தாலும் கொஞ்ச ஆளுங்க, குரங்களை பிடிச்சு வியாபாரிக்கிட்ட கொடுத்து , அவன் கொடுக்குறதா சொன்ன பணத்தை வாங்கிட்டாங்களாம்.
இந்த சேதி காட்டுத்தீ மாதிரி பரவ, நிறைய பேர் குரங்கு பிடிக்கிற வேலையில இறங்குனாங்களாம். கொஞ்ச நாள் கழிச்சு, அந்த வியாபாரி ஒரு குரங்குக்கு 200 ரூபாய் தருவதாக சொன்னானாம். அது வரை சோம்பேறித்தனமா வீட்டிலேயே இருந்தவங்களும் உடனே குரங்கு பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பாக்கி இருக்கிற குரங்குகளை எல்லாம் 200 ருபாய்க்கு ஜனங்க வித்ததும், இனிமேல் வாங்குற குரங்குக்கு 500 ரூபாய் தரேன்னு சொன்னானாம் வியாபாரி..
ஜனங்களுக்கு தூக்கம் எல்லாம் போச்சு.. ஊருல மிஞ்சி இருக்குற அஞ்சாறு குரங்குகளையும் புடிச்சி வித்து, ஒரு குரங்குக்கு 500 ரூபாய் வாங்கினாங்களாம். வியாபாரி அடுத்து என்ன அறிவிப்பு விடப்போறான்னு மக்கள் ஆர்வமா காத்திருந்தாங்க...
ஒரு வாரம் ஊருக்கு போறதாவும், திரும்பி வந்ததும் ஒரு குரங்கை 1000 ரூபாய்க்கு வாங்கிக்கிறதாகவும் சொன்னான் வியாபாரி. தன் வேலைக்காரனை கூண்டில் இருக்கிற குரங்குகளை எல்லாம் பாத்து பராமரிக்க சொல்லிட்டு, தன்னோடு ஊருக்கு போனானாம் வியாபாரி. பிடிச்சு வித்து 1000 ரூபாய் வாங்குறத்துக்கு ஒரு குரங்குக்கூட எஞ்சி இல்லையேன்னு மக்களுக்கு கவலை.
அதை பார்த்த வியாபாரியோட வேலைக்காரன், ஜனங்களுக்கு ஒரு குரங்கை 700 ரூபாய்க்கு விக்கிறதாக சொன்னானாம். காட்டு தீ மாதிரி செய்தி பரவிச்சு. வியாபாரி 1000 ரூபாய்க்கு குரங்கு வாங்கினால், எப்படியும் தங்களுக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும்னு யோசிச்சாங்க ஊர் ஜனங்க அடுத்த நாள் கூண்டில அடைஞ்சு இருக்கிற குரங்குகள வாங்க பெரிய வரிசை காத்திருந்துச்சு.
ஒரு குரங்குக்கு 700 ரூபாய் என்று வியாபாரியோட வேலைக்காரன் வித்தான். பணக்காரங்க நிறைய குரங்குகளை வாங்க, ஏழைங்க கடனைஉடனை வாங்கி, கொஞ்சம் குரங்குகளை வாங்கினாங்களாம்.
குரங்குகளை எல்லாம் பத்திரமா பாத்துக்கிட்ட ஜனங்க, அந்த வியாபாரி மறுபடியும் எப்போ ஊருக்கு வருவான்னு காத்திருந்தாங்களாம். யாருமே வரல.. எல்லாரும் அந்த வியாபாரியோட வேலைக்காரனைப் போய் பாத்து விஷயத்தை கேக்க ஓடினாங்க. ஆனால் அவன் எப்பவோ ஊரை காலிப்பண்ணி ஓடிப் போயிருந்தான்.. அப்பதான் ஊர் ஜனங்க, ஒன்றுக்கும் பிரயோஜனப்படாத குரங்குகளை 700 ரூபாய் கொடுத்து வாங்கி, விற்க முடியாத நிலைமையில இருக்கோம்னு உணந்தாங்க.
இந்த வியாபாரத்துக்கு பேருதான் "ஜியோ ". முதலில் இலவச சேவை கொடுத்தான். பிறகு 500MB free data கொடுத்தான். எல்லோரும் YOUTUBE, Facebook, Twitter, whatsapp, Instagramனு பழகினதும் 24 நாளுக்கு 1 GB 199 ரூபாய் என்கிறான்.. சிலரை மாசத்துக்கு 400 ரூபாய் வரைக்கும் வாங்க வைக்கிறான்.. இதான் குரங்கு வியாபாரம்.. சும்மா இருந்த சிரங்கை சொரிஞ்சு விட்ட கதையா, நிம்மதியா இருந்த நம்மை இன்டர்நெட்டுக்கு அடிமையாக்கி, ஒழுங்கா நல்லபடியா சேவை கொடுத்துக்கிட்டிருந்த BSNL, IDEA, HUTCH, AIRCEL எல்லாரையும் கடன்காரனாக்கி தான் மட்டும் தான் இந்த தொழில்ல நிக்கமுடியும்னு ஆனதுக்கப்புறமா, தன் இஷ்டப்படி விலைய ஏத்துறான் பாருங்க அதுதான் இந்த குரங்கு வியாபாரம்..

இனிய காலை வணக்கம் 😁😁😁பழைய கதை... சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல...சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு ...
23/01/2026

இனிய காலை வணக்கம் 😁😁😁

பழைய கதை...
சிரிச்சு... வயிறு வலிச்சா நான் பொறுப்பல்ல...

சொர்க்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது. கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து, "நீ என்ன பண்ணுவியோ தெரியாது. ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகணும்". என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது. அதாவது, சொர்க்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்று கேட்க வேண்டும். யாருடைய இறந்த விதம் வித்தியாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது, அவனிடம் சொர்க்கத்தின் புதிய விதியை தேவதை கூற, அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுவது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.

ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு, பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும், 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா?' ன்னு கேட்டா.

நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன். நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான்.

எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி. அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன். அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான்.

நான் உடனே கிச்சனுக்குள்ள போய், பிரிட்ஜை இழுத்துகிட்டு வந்து, பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு, அந்த பிரிட்ஜை கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன்.

இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."

அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம்". என்றது.

அவன் போன சற்று நேரம் கழித்து, இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற, அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம். அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.

நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க. திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன், பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன். நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.

அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ்யை என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்".

அவன் பேசி முடித்ததும், தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.

மூன்றாவதாக ஒருத்தன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது. அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.
அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா. நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான். அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா.

நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?

😂 😂 😂 😂 😂

டீச்சர் : ஏன் லேட்?சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம...
12/01/2026

டீச்சர் : ஏன் லேட்?

சிறுவன் : வெளில ஒரு போர்டு போட்டிருந்தது அதான் லேட்

டீச்சர் : போர்டுக்கும் லேட்டா வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?

சிறுவன் : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்னு போர்டு வச்சுருந்தாங்க.😆😆😆

உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?

தெரியாது

Smiles

எப்படி?

முதல் எஸ்-சுக்கும் கடைசி எஸ்-சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.
😜😅😂😂

Mokka Joke ma
Coffee ஏன் உடம்புக்கு நல்லது இல்ல?

ஏன்னா அதுல 2 “e” இருக்கு
😆😆🤣😂😅

 #பொழுது_போக! சிரிப்பு வெடிகள்!1.ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன்தான். பயப்பட வேண்டாம்னு. அப்புறம் ...
10/01/2026

#பொழுது_போக! சிரிப்பு வெடிகள்!
1.ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன்தான். பயப்பட வேண்டாம்னு. அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க."

"அடி இவளே, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட!"

2.டேய்! உங்க அம்மாவைப் போட்டு உங்க அப்பா அடி அடின்னு அடிக்கிறார்டா!

போடா! தெரியாம சொல்றே! அது எங்க வீடா இருக்காது!

3. இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

4. ஏண்டா கோயில்லே தேங்காய் உடைக்கும் போது, ஃபோன் பண்ணித் தொலைச்சே! "

என்னாச்சு?

"தேங்காயைக் காதிலே எடுத்து வைத்துக் கொண்டு... மொபைலை போட்டு உடைச்சுட்டேன்!"

5.கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார், 'வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறீர்கள்?'

வாலி சொன்னார், 'ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா?அதனால்தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.

அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார், 'அப்படியும் உங்களுக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே? 'இதற்கு வாலி சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்,'நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!'.

6.ஆசிரியர்: கண்ணகி மதுரையை எரித்தார். இது எந்த காலம்?

மாணவன்: தீயணைப்பு வாகனம் இல்லாத காலம்.

7. வாழ்க்கையில் நடப்பதை எளிமையாக ஒரு தத்துவம் மூலம் சொல்றேன்!

சொல்லுப்பா, கேட்டுக்கறேன்.

உடம்பில் இலட்சக்கணக்கான செல் கள் இருக்கின்றன. ஆனால், ஒரு செல்லில் கூட சிம் போட்டுக்க முடியாது.

8.ஆசிரியர் : உன்கிட்ட 3 பிஸ்கெட் இருக்கு... அப்போ உன்னைப் பார்க்க உன் நண்பர்கள் 3 பேர் வராங்க. நீ என்ன பண்ணுவ?

மாணவன் : பிஸ்கெட்ட மறைச்சு வெச்சுருவேன் சார்.

9.உறவினர்: போயும் போயும் வேலைக்கே போகாத பையனை உங்க பெண்ணுக்கு கட்டி வெச்சுட்டீங்களே?

பெண்ணின் தந்தை: 'ஒர்க் ஃப்ரம் ஹோம்'னு சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன்!

10.கரண்: கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?

கிரண்: தெரியலியே?

கரண்: சுவரொட்டிதான்.

11.பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்?

ராமு : பல்லில் சொத்தையோட போகணும்.

பாமா: பல் சொத்தையோட தான் போனேன். ஆனால், பல் டாக்டர் ஃபீஸ் என்று சொல்லி என் சொத்தையே எழுதி கேக்கறாரே!

12.உமா: நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்.

பாமா: எதை வைத்து?

உமா: என் பேனாவை வைத்துத்தான்!

13. விஜய்: கொக்கு ஏன் ஒத்த கால்லே நிக்குது?

அஜய்: இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே! அதனாலதான்.

14. ரேணு: அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை?

பானு: அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு: அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

15. தலையில் இருந்து அடிக்கடி முடி கொட்டுவது ஏன் தெரியுமா?

தெரியாது. சொல்லுங்க!

தலையில முடி இருக்கிறதால தான்.

08/01/2026
23/11/2025

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது...
[இன்றய தமிழக மற்றும் இந்திய அரசியல்]

இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... சிந்திக்கவும்..........
படித்ததில் பிடித்தது

சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...?கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ...
01/11/2025

சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...?

கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்...

ம்... அப்புறம்...?

அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா உட்க்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர்...

அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே...?

ஆமா டாக்டர்...!

அப்புறம்... லேசா தல சுத்திருக்குமே..?

இல்ல... கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்...

ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி உட்க்கார்ந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே...?

அய்யோ... ஆமா டாக்டர்....

அப்புறம்... அதே சோபால சாய்ஞ்சாப்பல படுத்து தூங்கணும்னு தோனிருக்குமே...?

ஆமா டாக்டர்... ஆமா டாக்டர்.... அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றீங்களே....

அப்புறம்... சோபால சரிஞ்சி படுத்தப் பிறகு நெஞ்சில யாரோ ஏறி மிதிச்சா மாதிரி இருந்திருக்கும்... பயந்து போய் என்ன பார்க்க வந்துட்டீங்க ரைட்டா...?

டாக்டர்ர்ர்.... நீங்க ஜீனியஸ் டாக்டர்... எப்படி டாக்டர் அப்படியே சொல்றீங்க...?

இந்த சிம்டெம்ஸ்லாம் எனக்கும் இருக்கு...

ஐய்யோ டாக்டர் நீங்களும் கிரகணம் பிடிச்சிருந்த டைம்ல சாப்புட்டுட்டீங்களா...?

இல்ல... உங்க வீட்டு 'பொங்கலை' முன்ன ஒரு தடவ நானும் சாப்ட்டிருக்கேன்...!

😳😳😳

10/10/2025
ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!...
10/10/2025

ஒரு ஆராய்ச்சி மாணவன் தவளை ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.
*"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான்!*.
ஒரு காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்.தாவியது.
இரண்டாம் காலை வெட்டி விட்டு "தாவு" என்றான். வலியோடு தாவியது.
மூன்றாம் காலை எடுத்தும் மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.
நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்.
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்தது. மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்.
அதனிடமிருந்து அசைவேயில்லை!
ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்-
*"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்கு காது கேட்காது"*
*இப்படி தான் இன்றய கல்விமுறையும் பலரின் புரிதல்களும் உள்ளது.*

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...டீச்சர் : வெளக்கு, மெழுகுவர்த்தி ஏ...
10/10/2025

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?

மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகுவர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டியை எடுக்க முடியலை...

டீச்சர் : ஏன்டா...?

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்...

குளிக்கல எப்படிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா.. ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா? சோம்பேறி... எருமை..

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...

டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்ல எல்லாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ற..

மாணவன்: உண்மை தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீஸை புடிங்கிட்டாங்க...

டீச்சர்: கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...

மாணவன்: ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி. லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல.

டீச்சர்: ஏரியா லைன்மேன் போன் நம்பரை வாங்கி வரசொல்ல வேண்டியது தான...

மாணவன்: வர சொல்லலாம் தான்... ஆனா முடியல...

டீச்சர்: ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...

மாணவன் : அதெல்லாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...

டீச்சர்: அது ஏன்...?

மாணவன்: டீச்சர் நீங்க லூசே தான்... அதான் மொதல்லயே சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...

😳😳😳😳

( அடுத்த ஒரு வாரம் டீச்சர் லீவு...)

எல்லாரும் கொஞ்சம் கவனமா படிங்கஅந்தக் காலத்துல .....அப்படின்னா ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடிஒரு ஊர்ல ஒரு மக்கு பையன் இர...
10/10/2025

எல்லாரும் கொஞ்சம் கவனமா படிங்க

அந்தக் காலத்துல .....

அப்படின்னா ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடி

ஒரு ஊர்ல ஒரு மக்கு பையன் இருந்தான்.
அவன் பெயர் ஜக்கு.

க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான் ஜக்கு.

படிப்புல எப்பவுமே முட்டை வாங்குற அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்.

சங்கடத்தோட அவனோட அம்மா அந்த ஊர்ல இருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.

25 வருஷத்துக்கு அப்புறம்,

பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.

எல்லா டாக்டர்களும் பரிசோதித்தார்கள்.

அவர்கள் கூறினார்கள். நீங்கள் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான் இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.

அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ஹெட்மாஸ்டரை வெண்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.

ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.

எதிரே அழகான இளவயது டாக்டர் தன் முன்னில்.

தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார் ஹெட்மாஸ்டர்.

ஒரு சிறு புன்சிரிப்போடு டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின் முகம் அதிர்ச்சியில் விளறியது.

என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை தூக்கினாலும் உயர்ந்த கை கீழே விழுந்தது.

கண்கள் நிரந்தரமாய் மூடியது

திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த டாக்டர் திரும்பி பார்த்தபோது,

சொருகி இருந்த வெண்டிலேட்டரோட Pin அ புடுங்கிட்டு Vaccum cleaner ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தான் நம்முடைய முட்டாள் ஜக்கு.

அவன் இப்போ அங்க
கிளீனரா வேல பாக்குறான்.

ரொம்ப சாரி.

அந்த இளவயது டாக்டர்தான் ஜக்குவா இருக்கும்னு நீங்க நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம்

நீங்க சினிமாவும், சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.

ஜக்கு என்னைக்கும், எப்பவும் அதே ஜக்கு தான்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOKKA JOKE MA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share