14/04/2023
சிதைந்த கனவுகள்
*******∆∆∆*********
மூவரசம்பட்டு
தீர்த்தவாரி திருக்குளமே!
ஏனிந்த சீற்றம்? உன்னில் மாற்றம்?
இறைத்தொண்டாற்றும் ஆன்மீக இளைஞர்களை பறித்தாய்!
அவரை பெற்றவரை பரிதவிக்க வைத்தாய்!
செடி வளரும்போது வேரை பிடுங்கி னாய் !
அவர்தம் கனவுகளை சிதைத்து விட்டாய் !
தண்ணீரை தேக்கி வைத்திருக்கும் குளமே!
கண்ணீரை நிரப்பி கரையில் நிற்கின்றோம்.
அப்பரையும் சுந்தரரையும் இப்போது தேடுகின்றேன்;
ஆவி பிரிந்தாலும், உயிர்த்தெழவைக்கும் நாயன்மாரன்றோ.
இறைவனிடம் இனி, மேல் முறையீடு செய்வேன் !
இது போன்ற பேரிழப்பு இனி எப்போதும் வேண்டாமென்று.
___ சாய் சேது____
∆∆∆************∆∆∆