அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்

  • Home
  • Sri Lanka
  • Trincomalee
  • அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்

அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம்-திருகோணமலை.

01/08/2026
வாசிப்போம் சுவாசிப்போம்" சிறுகதை வாசிப்பு-06. ஒவ்வொரு சிறுகதைகளும் நம்பவரின் இலக்கியம். வாசிப்பவர்கள்,வாசிப்பின் மீது பற...
08/07/2026

வாசிப்போம் சுவாசிப்போம்" சிறுகதை வாசிப்பு-06. ஒவ்வொரு சிறுகதைகளும் நம்பவரின் இலக்கியம். வாசிப்பவர்கள்,வாசிப்பின் மீது பற்றுள்ள ஆர்வலர்கள்,கேட்டு ஆதரவு தருபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

வாசிப்போம் சுவாசிப்போம் – சிறுகதை வாசிப்பு தொடரின் ஆறாவது நிகழ்வாக,...

உங்கள் ஆதரவை தந்துதவுங்கள். subscribe மற்றும் Like செய்து வாசிப்போரை ஊக்கப்படுத்துங்கள்.
05/07/2026

உங்கள் ஆதரவை தந்துதவுங்கள். subscribe மற்றும் Like செய்து வாசிப்போரை ஊக்கப்படுத்துங்கள்.

📚 வாசிப்போம் சுவாசிப்போம்📖 சிறுகதைத் தொகுப்பு: நெல்லிமரப் பள்ளிக்...

மாணவர் நலன் காக்கும் மாநகர சபையின் இத்தீர்மானம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுமா? ​"சட்டங்கள் இயற்றுவது எளிதுஆனால்...
26/06/2026

மாணவர் நலன் காக்கும் மாநகர சபையின் இத்தீர்மானம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுமா?

​"சட்டங்கள் இயற்றுவது எளிது
ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதே கடினம்"
என்ற பொதுவான ஐயம் இங்கும் எழுவது இயல்பானதே.
இத்தீர்மானம் காகிதத்தில் மட்டுமில்லாமல் களத்திலும் முழுமையாக வெற்றிபெற வேண்டும்.

இத் தீர்மானத்திற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பில் தான் தங்கியுள்ளது.

ஆரம்பத்தில் சில பொருளாதார அல்லது நேர மேலாண்மை ரீதியான எதிர்ப்புகள் தோன்றினாலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

திருகோணமலை மாநகர சபையின் தீர்மானம் மாணவர்களை ஒரு மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாகப் பார்க்காமல் அவர்களை ஆரோக்கியமான சமூகப் பிரஜைகளாக மாற்ற எடுக்கும் உன்னத முயற்சியாகும்.

​இரவு நேரப் பயணங்களால் மாணவர்களுக்கு (குறிப்பாக மாணவிகளுக்கு) ஏற்படும் பாதுகாப்பு அச்சத்தைப் போக்கவும், அறநெறி கல்விக் கற்றலுக்கு வழி வகுப்பதற்காகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் குடும்பத்துடன் செலவழிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கும்.
எனவே சுயநலன்களைத் தாண்டி

திருகோணமலை மாநகர சபையின் இந்த ஆரோக்கியமான தீர்மானத்திற்கு ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 #திரையுலகக்  #கனவை  #நனவாக்கும்  #அரிய  #வாய்ப்பு  #திருகோணமலையில்  #நடிப்புப்  #பயிற்சிப்  #பட்டறை​கலை மற்றும் நடிப்பு...
25/06/2026

#திரையுலகக் #கனவை #நனவாக்கும் #அரிய #வாய்ப்பு #திருகோணமலையில் #நடிப்புப் #பயிற்சிப் #பட்டறை

​கலை மற்றும் நடிப்புத் துறையில் சாதிக்கத் துடிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி, இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்,நடிகர்கள் மற்றும் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படும் விசேட நடிப்புத் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

​"அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை" கலை இலக்கிய மன்றம் - திருகோணமலை பெருமையுடன் வழங்கும் இந்நிகழ்வு கலைத்துறையில் தடம் பதிக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கும் ஏனையோருக்கும் ஒரு சிறந்த தளமாக அமையவுள்ளது.

நாள்: 18.07.2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை
நிகழிடம்: நீங்கள் பதிவுகளை மேற்கொண்ட பின்னர், நிகழிடம் பற்றிய விபரங்கள் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்படும்.

கலாசார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றத்தினால் வழங்கப்படும் பெறுமதிமிக்க அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் வழங்கப்படும்.
இது உங்களது கலைப் பயணத்திற்கு ஒரு சான்றாக அமையும்.

கலைக்கும் நடிப்புக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் எவ்வித வயதெல்லையும் இன்றி ஆர்வமுள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும்.

​இப்பயிற்சிப் பட்டறையானது மிகவும் சலுகை அடிப்படையிலான கட்டணங்களில் நடத்தப்படுகிறது.

மாணவர்களுக்கு: ரூபா 500/- மாத்திரம்.
ஏனையோருக்கு: ரூபா 1000/- மாத்திரம்.

​இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே தங்களது பதிவுகளை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்ப முடிவு தேதி:05.07.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ உங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மற்றும் பதிவுகளுக்கு:0772121508 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

​உங்கள் நடிப்புத் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், இலங்கையின் முன்னணி கலை ஆளுமைகளிடம் இருந்து நேரடியாகக் கற்றுக்கொள்ளவும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்.

தந்தையர் தினத்தில் "கவிதைகளால் தந்தையர்க்கு மகுடம் சூட்டுவோம்". அன்பின் அப்பாவுக்காக உங்கள் கவிதைகளை கூற வாருங்கள்.
17/06/2026

தந்தையர் தினத்தில் "கவிதைகளால் தந்தையர்க்கு மகுடம் சூட்டுவோம்".
அன்பின் அப்பாவுக்காக உங்கள் கவிதைகளை கூற வாருங்கள்.

நாம் வளச்சியடைந்த சமூகம் என கூறிக்கொள்கிறோம்.ஆயினும் அது வெறும் தோற்றப்பாடு என்பதை இன்றைய கல்விச் சமூகத்தின் மூலம் அறிய ...
06/06/2026

நாம் வளச்சியடைந்த சமூகம் என கூறிக்கொள்கிறோம்.ஆயினும் அது வெறும் தோற்றப்பாடு என்பதை இன்றைய கல்விச் சமூகத்தின் மூலம் அறிய முடிகிறது..வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பதே உண்மை.

இச்செயற்பாடு எங்கள் சிறு முயற்ச்சி.

 #தமிழ்த்தாய்_வாழ்த்து #  #தமிழ்மொழி_வாழ்த்து # பாடல் போட்டி.தமிழர் பண்பாடு, மரபு, மொழிப்பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும்...
20/05/2026

#தமிழ்த்தாய்_வாழ்த்து # #தமிழ்மொழி_வாழ்த்து # பாடல் போட்டி.

தமிழர் பண்பாடு, மரபு, மொழிப்பற்று ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழ்மொழி வாழ்த்தும் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. இவை வெறும் பாடல்கள் அல்ல; தமிழரின் அடையாளம், பெருமை, ஒற்றுமை ஆகியவற்றின் வெளிப்பாடுகளாகும்.

இங்கு மறக்கப்படும் நமது மரபு,பண்பாட்டு விழுமியங்களை தக்கவைக்கும் நோக்கில் அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் மேற்கொள்ளும் சிறு முயற்ச்சி. சரியான முறையில் ஒவ்வொரு காணொளியாக 0772121508 எனும் இலக்கத்திற்கு அனுப்பிவைத்து பெறுமதியான பரிசினை வெல்லுங்கள்.

"நூல்கொண்டு நிமிர்" ​"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்...
18/05/2026

"நூல்கொண்டு நிமிர்"
​"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க, ஒரு மனிதனை அறிவுப்பூர்வமாகவும் ஆளுமைமிக்கவனாகவும் மாற்றுவதில் புத்தகங்களுக்கு நிகர் வேறில்லை.

இன்றைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் எப்போதும் கைபேசியும் கையுமாகத் திரியும் சூழலில், அவர்களைப் புத்தகங்களின் பக்கம் திசைதிருப்புவது என்பது மிக முக்கியமான சவாலாக மாறியுள்ளது.
​அந்தச் சவாலைத் தகர்த்தெறிந்து, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊட்டி வளர்க்கும் நோக்கில், நேற்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மாநகரசபை சிறுவர் பூங்கா அருகில் "நூல் கொண்டு நிமிர்"
நிகழ்வு அரங்கேறியது.

​"அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை" அமைப்பினரால் நூல்கொண்டு நிமிர்
என்ற தலைப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதையும், அவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், மாணவர்களுக்கு எதையுமே "இலவசமாக" வழங்கக் கூடாது என்பதில் அமைப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். உழைப்புக்கும் முயற்சிக்கும் தான் மதிப்பு என்பதை உணர்த்தும் வகையில், அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆர்வத்தோடு வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கவிக்கப்பட்டது.

இது மாணவர்களிடையே வாசிப்பு மீதான ஆர்வத்தை அதிகரித்ததோடு, உழைத்து ஈட்டும் பெருமையையும் கற்றுக் கொடுத்துள்ளது.

​இன்றைய அவசர உலகில், பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது பல பெற்றோர்களுக்குக் கடினமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்நிகழ்வில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

​நித்தமும் கைபேசித் திரைகளில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகள், சிறிது நேரமாவது தங்கள் கல்விக்காகவும், ஆளுமை வளர்ச்சிக்காகவும் புத்தகங்களைக் கையில் ஏந்தியதைக் கண்டு பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட பெற்றோர்கள் காட்டிய இந்த முனைப்பு, சமூக மாற்றத்திற்கான ஒரு நல்ல தொடக்கமாகும்.

​ஒரு சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக மாற்றுவதற்கு வித்திடும் இத்தகைய நிகழ்வுகள் காலத்தின் கட்டாயமாகும். மாணவர்களின் கல்வி, ஆளுமைத் திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில், தங்களின் சுயநலமற்ற சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் "அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை" அமைப்பின் நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
​அத்துடன், இந்நிகழ்வை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்ட ஆர்வமிக்க மாணவர்களுக்கும், அவர்களுக்குத் துணையாக நின்ற பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.
​நூல்கொண்டு நிமிர்வோம்... புதியதோர் உலகம் செய்வோம்.

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share