Lankafire News

Lankafire News Daily Tamil News Updates & Entertainment Videos 24/7 News Update From SriLanka.

06/02/2026

படுக்கையறையின் வாஸ்து ரகசியங்கள்..!!!

Lankafire News

ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்...
06/02/2026

ஐன்ஸ்டீன் மூளையை தனியாக எடுத்து பாதுகாக்க என்ன காரணம்?
அவரது மூளை மட்டுமல்ல, அவரது கண்களும் அவரது கண் மருத்துவரால் சேமிக்கப்படுகின்றன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு 55 ஆண்டுகளில், பல அறிவியலாளர்கள் அவரை மிகவும் புத்திசாலித்தனமாக ஆக்கியது என்ன என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

ஆனால் ஐன்ஸ்டீனின் மேதையின் இரகசியங்களைத் திறக்கும் முயற்சியில் வேலையும் புகழையும் இழந்த தாமஸ் ஹார்வி என்ற நோயியல் நிபுணரை விட வேறு யாரும் கடுமையாக முயற்சி செய்யவில்லை. ஹார்வி ஒருபோதும் பதிலைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியமில்லாத நிகழ்வுகளின் வரிசையில், அவரது தேடல் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்ற உதவியது.
எந்தவொரு நிகழ்விலும், ஹார்வி தனது வேலையை இழந்தார் மற்றும் பல சகாக்களால் கண்டனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் மூளையை வைத்திருந்தார். அவரது நியாயப்படுத்தல், அறிவியலுக்கான கடமை உணர்வு.

இந்த மூளையைப் பாதுகாப்பதும், ஐன்ஸ்டீனின் மேதையின் திறவுகோலைக் கண்டுபிடிக்கக் கூடிய சில முன்னணி நரம்பியல் நிபுணர்களின் கைகளில் வைப்பதும் அவருடைய பங்கு என்று அவர் நம்பினார்.

ஐன்ஸ்டீனின் மூளையை பரிசோதித்த விஞ்ஞானிகள் இது சாதாரணமானது அல்ல என்று முடிவு செய்துள்ளனர். சராசரி வயது வந்த ஆணின் மூளையை விட ஐன்ஸ்டீனின் மூளை எடை குறைவாக இருக்கும்போது, ​​2.7 பவுண்டுகள் மற்றும் 3 பவுண்டுகள், மூளையின் தாழ்வான பகுதி சராசரி மூளையை விட 15% பெரியது.

ஐன்ஸ்டீனின் மூளையில் மிகவும் குறுகிய பக்கவாட்டு சல்கஸ் இருந்தது, அது ஓரளவு காணவில்லை. அவரது மூளை மற்ற மூளையை விட 15% அகலமானது. இந்த தனித்துவமான மூளை பண்புகள் கணிதம் மற்றும் இடஞ்சார்ந்த பகுத்தறிவுக்கு முக்கியமான நியூரான்களுக்கு இடையே சிறந்த இணைப்புகளை அனுமதித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

1985 ஆம் ஆண்டில், ஐன்ஸ்டீனின் மூளையின் இரண்டு பாகங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான நரம்பணு அல்லாத உயிரணுக்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது-க்ளியா என்று அழைக்கப்படுகிறது-ஒவ்வொரு நியூரானுக்கும் அல்லது மூளையில் நரம்பு கடத்தும் செல். அதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு, ஐன்ஸ்டீனின் மூளையில் பேரியட்டல் லோபில் பொதுவாக காணப்படும் ஒரு பள்ளம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

மிகவும் சிறப்பானது, அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் இறந்தபோது, ​​ஏப்ரல் 18, 1955 அன்று, அழைப்பில் உள்ள நோயியல் நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஐன்ஸ்டீன் தனது மூளையையோ அல்லது உடலையோ படிக்க விரும்பவில்லை; அவர் வழிபட விரும்பவில்லை. ... ஆனால் ஐன்ஸ்டீன் அல்லது அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி ஹார்வி எப்படியும் மூளையை எடுத்துக் கொண்டார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண் உருண்டைகள் NYC யில் ஒரு பாதுகாப்பு வைப்பு பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ளன. ஹார்வி ஐன்ஸ்டீனின் மூளையைப் பாதுகாத்தார் (170 மற்றும் 200 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இடையில் பிரித்து), அதே நேரத்தில் அவர் ஐன்ஸ்டீனின் கண் மருத்துவர் ஹென்றி ஆப்ராம்ஸுக்கு பரிசளித்த அவரது கண்ணிமைகளை அகற்றினார்.

முதலைகள் முதுமையால் இறப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம்.உயிரியல் முதுமையால் முதலைகள் ஒருபோதும் இறக்காது. அவை ...
06/02/2026

முதலைகள் முதுமையால் இறப்பது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம்.

உயிரியல் முதுமையால் முதலைகள் ஒருபோதும் இறக்காது. அவை தொடர்ந்து வளர்கின்றன.

சாப்பாடு இல்லாத காரணத்தினாலோ, உடம்பு சரியில்லையாலோ தான் இறக்கின்றன. அப்படி என்றால், முதலைகளுக்கு அழிவு இ,ல்லையா?

இல்லை.

ஆனால் அவற்றின் வாழ்நாள் நீண்டுகொண்டே போகும். ஒரு முதலையின் சராசரி வாழ்நாள், 70 ஆண்டுகள் அல்லது கூடுதலாக இருக்கலாம்.

ஆனால் மனிதர்களால் வளர்க்கப்படுகின்ற முதலைகளின் வாழ்நாள் 100 ஆண்டுகளையும் கடக்கின்றது. அப்படி ஒரு ஆண் முதலை ரஷ்ய உயிரியல் பூங்காவில் 115 ஆண்டுகள் வாழ்ந்தது.

ஏன் முதலைகள் இப்படி நீண்ட காலம் வாழ்கின்றன?

கடினமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றின் திறன்தான் மிகப்பெரிய காரணம்.

மூன்று ஆண்டுகள் கூட உணவு இன்றி வாழ முடியும்.
எனவேதான், அவை தங்கள் ஆற்றலை மிகவும் கவனமாக. சரியான நேரத்தில் பயன்படுத்துகின்றன.

முதலை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை காமண்டில் மறக்காமல் தெரிவிக்கவும்.

Lankafire News

சனிக்கிழமை தீபக்கின் பிறந்தநாள்.ஒரு நண்பரிடம் “நாளை காலை சந்திப்போம்” என்று உறுதி கூறிவிட்டுத்தான் அவன் பிரிந்தான். அந்த...
19/01/2026

சனிக்கிழமை தீபக்கின் பிறந்தநாள்.
ஒரு நண்பரிடம் “நாளை காலை சந்திப்போம்” என்று உறுதி கூறிவிட்டுத்தான் அவன் பிரிந்தான். அந்த இரவு, தனது அக்கவுண்டிலிருந்து 45,000 ரூபாய் எடுத்து வீட்டில் வைத்திருந்தான். அவன் ஏன் இப்படிச் செய்தான் என்பதற்கான எந்த ஒரு விளக்கமும் எங்களுக்கில்லை.

வீடியோ வெளியான உடனே நாங்கள் அவனிடம் சொன்னோம் — “இதில் உன் பக்கம் எந்தத் தவறும் இல்லை. சட்டப்படி முன்னே போகலாம்.” நாங்கள் அவனுக்கு நிறைய தைரியம் கொடுத்திருந்தோம். அவன் இப்படிச் செய்வான் என்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் அவனுடைய நடத்தையில் எங்களுக்குத் தெரியவில்லை.

எங்களுக்கொரு வேண்டுகோள் உள்ளது:
அவனுடைய மொபைல் போனை சைபர் பிரிவு முறையாக விசாரிக்க வேண்டும். அவனுக்கு ஏதேனும் கால்களோ அல்லது மெசேஜ்களோ வந்ததா என்பதை கண்டறிய வேண்டும். ஏனென்றால், அந்த அளவு பணத்தை அதே இரவில் எடுத்துவைத்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே.

— தீபக்கின் அயலவரின் வார்த்தைகள்

மற்றொரு அயலவர் கூறியது:
அவன் யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடமாட்டான். வீட்டைவிட்டு வெளியேறினால் வேலை இடம் வரை, ஊரில் யார் எந்த உதவி கேட்டாலும் செய்து கொடுக்கும் இயல்புடையவன். முந்தைய நாளே அழைத்தபோது கூட, அவன் பேச்சில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவன் இனி இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

— ஒரு நண்பர் கண்ணீருடன் கூறியது

தீபக்கின் தந்தையின் வார்த்தைகள்:
“என் மகன் வீட்டைவிட்டு வெளியே சென்றால், இடையிடையே அவன் அம்மாவுக்கு போன் செய்வான் — ‘மம்மி சாப்பிட்டீர்களா? டாடி எங்கே?’
டாடி வெளியே போனால், ‘நீங்கள் தனியாக இருக்காதீர்கள். அடுத்த வீட்டிலோ அல்லது கோவிலிலோ போய் உட்காருங்கள் மம்மி’ என்று சொல்லுவான்.

எங்களை இப்படிப் பார்த்துக் கொண்டிருந்த என் மகன், எந்தத் தவறும் செய்யமாட்டான். அவனை அப்படித்தான் நாங்கள் வளர்த்தோம்…”

Copy post

கேரளப் பெண்கள் கொள்ளை அழகுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு ?கடவுளின் தேசமான கேரளாவை பிடிக்காதவர்கள்...
18/01/2026

கேரளப் பெண்கள் கொள்ளை அழகுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு ?

கடவுளின் தேசமான கேரளாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களின் மொழியை போலவே அவர்களும் மெல்லினமானவர்கள். அதிலும் மிக முக்கியமாக தெரிந்த ஒரு விஷயம் மேக்கப் போடாமலும் மினுமினுக்கும் அழகு கொண்டவர்கள் கேரளப் பெண்கள். (Kerala) பெண்களை கண்டு பெண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு இயற்கையான வனப்புடன் திகழும் கேரள பெண்களின் அழகு ரகசியம் சிலவற்றை உங்களுக்காக ரகசியமாக கொடுக்கிறோம். நீங்கள் அதனை பயன்படுத்தி மினுமினுக்கும் தேகம் மற்றும் ஜொலிக்கும் முக அழகை பெறுங்கள்.

#கேரள உணவு முறை:

ஒவ்வொரு மாநிலத்திற்கென்று ஒரு உணவு பழக்க வழக்கம் உண்டு. கேரளாவில் பிரபலமானது அதன் மிகப் பெரிய அரிசிகள் கொண்ட சாதம் தான். அதில்தான் சாதாரண அரிசியை விட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. நிறம் மாற்றி பாலிஷ் செய்யப்படாத கேரளா அரிசியை மாதத்தில் சில நாட்கள் எடுத்துக் கொள்வது உங்கள் அழகை மேலும் கூட்டும்.

#பால்:

கேரள பெண்களின் உடல் வனப்பிற்கு பெரிதும் உதவுவது பால்தான். முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்து அவைகளை மூடி விடும் குணம் பாலிற்கு உள்ளது. மேலும் முகத்தின் நிறம் மங்காமல் காக்கும்.

#முல்தானி மெட்டி:

கேரளாவில் மரங்கள் நிறைய உண்டு. அவர்களுக்கு இயற்கையான பல உயர்தர பொருள்கள் ஏற்க கூடிய விலையில் கிடைக்கும். அதில் ஒன்றுதான் தூய்மையான சந்தனம். இந்த சந்தனத்தை முல்தானி மெட்டியோடு கலந்து பசை போலாக்கி முகத்தில் தடவி காய விடுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி நிறம் மேலும் கூடும். மேலும் கரும்புள்ளிகள் வராமல் முகம் பளிங்கு போல மின்னும்.

முகத்தில் உதடுகளின் மேல் மெல்லிய முடிகள் மற்றும் தாடையின் கீழ் மெல்லிய முடிகள் சில பெண்களுக்கு இருப்பது சகஜம்தான். இதனை நீக்க நாம் பார்லர் செல்கிறோம். கேரள பெண்களோ ஒரு ஸ்பெஷல் கலவையை உபயோகித்து முடிகளை நீக்குகிறார்கள்.

நல்லெண்ணை, கோதுமை மாவு மற்றும் மஞ்சள் பொடியை பயன்படுத்தி அவர்கள் தங்கள் முகத்தை கழுவுகையில் தேவையற்ற ரோமங்கள் தானாகவே விழுந்து விடுகிறது.

#தேங்காய்:

ஊருக்கெல்லாம் தெரிந்த அந்த ஒரே ரகசியம்தான். கேரள பெண்களை மிக அழகாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் மற்றும் அது சார்ந்த பொருள்கள்தான்.

குளிக்கும் முன்பு வெயில் படும் இடமெல்லாம் தேங்காய் எண்ணெய் தடவி பின்னர் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு போட்டு குளிப்பதால்தான் இவர்கள் தேகம் மின்னுகிறது. அதுவும் பெரும்பாலான பெண்கள் ஆற்று நீரில் குளிப்பதால் அதில் உள்ள மினரல்கள் உடலில் ஏறுகின்றன.

கேரளாவெங்கும் அதிகமாக காணப்படும் தென்னை மரங்கள்தான் கேரளாவின் அழகு ரகசியமே.. அதில் இருந்து வரும் தேங்காயை பால் எடுத்து அதனை தலை மற்றும் உடல் முழுதும் தடவுகின்றனர். அதன் பின்னர் குளிக்கின்றனர். இதனால் தேங்காயின் சத்துக்கள் அனைத்தும் சருமத்திற்கு போகிறது. மேலும் தேங்காயின் வழவழப்பை போலவே கேரள பெண்களின் மேனியும் பளபளப்பு கூடுகிறது. கூந்தலும் 60 வயது ஆனாலும் மறைக்காமல் கருகருவென நீளமாக வளர்கிறது.

👍

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.

கேரள பெண்களின் நீளமான கருங்கூந்தல், குண்டு குண்டு, கண்கள், மென்மையான, பொலிவான சருமம் என அனைத்தும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்களாக உள்ளன.அப்படிப்பட்ட அவர்களின் அழகிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்க்கலாம்.கேரளா மாநிலமானது இயற்கை அழகுகளால் சூழப்பட்ட ஒரு அற்புதமான இடம். இந்த இயற்கை அழகு தான் அம்மாநில பெண்களின் அழகிற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேரளத்துப் பெண்கள் அனைவரும் தினமும் தங்களது தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினசரி தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

ஷாம்புவிற்குப் பதிலாக சீயக்காவை, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். தலையில் பொடுகு வராமல் இருப்பதற்காக, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள். கேரளத்து பெண்களின் நீண்ட கூந்தலின் மிக முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவென்றால் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதோடு, முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள் இதன் காரணமாகத் தான் அவர்களது முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது. கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது பேஸ் பேக் போடுவார்கள். அதிலும், கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள்.

இதுவும் அவர்களுடைய சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு, காரணம். கேரளத்து பெண்களின் கண்கள் மிகப் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

விற்பனைக்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள். கேரளத்து பெண்கள் அனைவரும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக இருக்கின்றது இவை தான் கேரளப் பெண்கள் கொள்ளை அழகுடன் ஜொலிப்பதற்கு காரணம்….

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர...
12/01/2026

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த 32, 34, 46 வயதானவர்களே உயிரிழந்தனர்.

மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிளிநொச்சி பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு நைட்டுக்கு ஒரு பெண்... பெற்றோர்களை அலற வைக்கும் கலாச்சாரம் !பூட்டானில் ஒரு கலாச்சாரம் உண்டு. அதாவது ஒரு குடும்பத்திற...
11/01/2026

ஒரு நைட்டுக்கு ஒரு பெண்... பெற்றோர்களை அலற வைக்கும் கலாச்சாரம் !

பூட்டானில் ஒரு கலாச்சாரம் உண்டு. அதாவது ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்தான். ஒரு குடும்பத்தில் நான்கு ஆண்கள் இருந்தால் நான்கு ஆண்களுக்கும் ஒரு மனைவி தான்.

இரவில் ஒவ்வொரு ஆண்கள் ஒவ்வொருவராக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள். இந்த நவீன காலத்திலுமா இப்படித் தொடர்கிறது? என யோசிக்க வைக்கிறது.

இதனை விட கொடூரமான ஒரு சம்பவம் கிழக்கு பூட்டானில் நடக்கிறது. அங்கே இரவு ஆனதும் எந்த பெண்ணையும் வெளியில் அனுப்ப மாட்டார்கள்.

நகரத்தில் இருந்து கிராமத்தை நோக்கி படையெடுக்கும் ஆண்கள், கண்ணில் பட்ட பெண்களை இழுத்துச் சென்று தங்களுடைய உடல் பசிக்கு இரையாக்கி கொள்வார்கள்.

எந்த பெண்களும் கிடைக்கவில்லை என்றால், நம்ம ஊரு கொள்ளையர்களை போல , நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை நாசம் செய்வார்கள்.

அவர்களுடைய முக்கிய குறி எதிர்த்து கேள்வி கேட்ட திறன் இல்லாத பெண்களாக பார்த்து, அவர்களை கட்டாயப் படுத்தி உறவு கொள்வதாகும்.

சில கிராமங்களில் வயல் வெளியில் தனியாக உறங்கும் பெண்களை குறி வைத்து இது போன்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேற்றப் படுகின்றன.

பூட்டானில் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனை சரியாக வகுக்கப்பட வில்லை என்பதால், நாளுக்கு நாள் பெண்கள் இரையாவது அதிகரிக்கின்றதே தவிர, இன்னும் குறைந்த பாடில்லை.

இப்படி அநியாயம் நடக்கும் போது ஒரு ஆண் கையும் களவுமாக சிக்கிக் கொண்டால், பழமையான வழக்கப்படி, அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கட்டாயப் படுத்துவார்கள்.

சிக்கிக் கொள்ளும் அளவுக்கு நகரத்து ஆண்கள் முன்னேற்பாடு இன்றி நுழைவதில்லை. ஒவ்வொரு பெண் வேட்டையிலும், ஒவ்வொரு மாதிரியான திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது.

ஒரு காலத்தில் தமக்கு விருப்பமான ஒரு இளம் பெண்ணைத் தேடும் கலாச்சாரமாக இருந்து, இன்றைக்கு அதுவே சமூக சீர்கேடாக மாறி விட்டது.

வெகு விரைவில் இந்தக் கலாச்சாரம் முற்றாக அழிந்து போக வேண்டும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

Lankafire News

ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனா...
11/01/2026

ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார்.

மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.

பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

யாழில் சொகுசு வீட்டிற்குள் தென்னிலங்கை பெண்கள் விபச்சாரம் ; பொலிஸாரின் முற்றுகையால் அம்பலம்வெளிநாட்டில் வசிப்பவரின் சொகு...
11/01/2026

யாழில் சொகுசு வீட்டிற்குள் தென்னிலங்கை பெண்கள் விபச்சாரம் ; பொலிஸாரின் முற்றுகையால் அம்பலம்

வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டினை கட்டி, அதனை கிளிநொச்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.

யாழில் சொகுசு வீட்டிற்குள் தென்னிலங்கை பெண்கள் விபச்சாரம் ; பொலிஸாரின் முற்றுகையால் அம்பலம் | Jaffna House Prostitution Women Held

வீடு முற்றுகை

அந்நிலையில் குறித்த வீட்டிற்கு பெண்கள், ஆண்கள் என பலர், மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்து செல்வதனை அயலவர்கள் கவனித்து, வீட்டில் தவறான நடவடிக்கைகள் நடைபெறுகின்றது என்பதனை ஊகித்து, வெளிநாட்டில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர்.

அது தொடர்பில் அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, கோப்பாய் பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நேற்று வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

Follow Me :- Lankafire News

வீட்டினுள் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தென்னிலங்கையில் இருந்து விபச்சார நடவடிக்கைக்காக அழைத்து வரப்பட்டிருந்த மூன்று பெண்கள் மற்றும், வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்த நபர் ஆகிய நால்வரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

புதையல் தோண்டிய தேரர் கைதுஅனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டப...
11/01/2026

புதையல் தோண்டிய தேரர் கைது

அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

119 எண் ஊடாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு செல்லும் போது சந்தேக நபரான தேரர் தனியாகவே 04 அடி ஆழம் வரை தோண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Lankafire News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share