Boomerang

Boomerang Boomerang is a international media organisation was founded in 2021.

We provide authent ic news from around world and srilanka in tamil and English languages.

16/08/2026

இலங்கை மண்ணில் இசை வெளியீடு காணும் இந்தியத் தமிழ் திரைப்படம் ‘நல்லபடம்’!

இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பில் புதியதொரு நிகழ்வாக, இந்தியத் தமிழ் திரைப்படமான ‘நல்லபடம்’ படத்தின் இசை வெளியீடு இலங்கையில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு Port City-யில் நடைபெறும் ‘World of Ravan’ இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் ‘நல்லபடம்’ திரைப்படத்தின் பாடல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீடு இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையவுள்ளது.

Harish Cinemas சார்பில் A. Alagu Pandian தயாரித்துள்ள இப்படத்தை, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய C. Prabhuram இயக்கியுள்ளார். Dr. A. Harish கதாநாயகனாகவும், Dhanalakshmi கதாநாயகியாகவும் நடித்துள்ளதுடன், Mottai Rajendran, Kalki Raja, Rama மற்றும் Priyadarshini உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘நல்லபடம்’ படத்தின் இசையை Sakishna Xavier கவனித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் இப்படத்திற்கான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில் Velmurugan, Arulpragasam, Punniya Selva, Gayathri Rajiv மற்றும் Shashank ஆகியோர் தங்களது குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.

மது தொடர்பான சமூகக் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகியவற்றை இணைத்து ‘நல்லபடம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இலங்கை இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பில் ஒலிக்கவுள்ள ‘நல்லபடம்’ பாடல்கள், இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் விரிவுபடுத்தும் நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#நல்லபடம்

16/08/2026

இலங்கையில் முதன்முறையாக இந்தியத் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீடு!

கொழும்பு போர்ட் சிட்டியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி “நல்லபடம்” இசை வெளியீடு

இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் ஆஃப் ராவண்” இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.

இந்தியத் தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் தமிழகத்திற்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.

ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள “நல்லபடம்” திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் “நல்லபடம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

நான்கு பாடல்கள் – முன்னணி பாடகர்கள்.

“நல்லபடம்” திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.

பாடல்களை வேல்முருகன், அருள்பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.

மதுவை மையப்படுத்திய சமூகக் கருப்பொருளை நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகிய அம்சங்களுடன் இணைத்து “நல்லபடம்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டுக்கு திரையுலக வாழ்த்துகள்

“நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இசை வெளியீட்டு விழா, இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மண்ணில் “நல்லபடம்” திரைப்படத்தின் இசை பிரமாண்டமாக அறிமுகமாகும் இந்த நிகழ்வு, இந்தியா–இலங்கை தமிழ் கலை உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

12/08/2026
11/08/2026

“நான் பார்த்த கந்தையா பாஸ்கரன்”

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்த ஒரு காலகட்டம்.

அவர்களின் வேதனையையும், போராட்டத்தையும் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம்.

“போங்கடா… நாங்கள் பொங்கலடா!”

என்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் திரு. வர்ஷன்.

அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒருநாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைத்தவர் அண்ணன் கந்தையா பாஸ்கரன்.

“பாடல் நன்றாக இருக்கிறது… வாழ்த்துகள்!”

அவ்வளவுதான்.

பார்ப்பதற்கு அது ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பாக இருக்கலாம்.

ஆனால், சில தொலைபேசி அழைப்புகள் பேசிவிட்டு முடிந்துவிடுவதில்லை.

அவை வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைத் திறந்துவிடுகின்றன.

அந்த ஒரு அழைப்பு, பின்னர் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த ஒரு சகோதரத்துவமாக மாறியது.

அறிமுகம் என்பது சில நேரங்களில் ஒரு கதவு

என் தமிழ் சினிமா பயணத்தின் ஆரம்ப காலங்கள்.

பல கனவுகளோடும், பல முயற்சிகளோடும் ஓடிக்கொண்டிருந்த காலம்.

ஒரு புதிய கலைஞனுக்கு திறமை மட்டும் போதாது.

அவனைப் பற்றி யாராவது சொல்ல வேண்டும்.

சரியான மனிதர்களிடம் அவனை அழைத்துச் செல்ல வேண்டும்.

சில கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும்.

அந்தப் பணியை எனக்காகச் செய்தவர்களில் அண்ணன் கந்தையா பாஸ்கரன் முக்கியமானவர்.

பல முக்கியமான இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

என்னுடைய திரைப்படப் பாடல்கள், ஆல்பங்கள் வெளியாகும்போதெல்லாம் அவற்றைப் பற்றிய செய்திகளை சினிமா உலகம், லங்காசிறி உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தார்.

அது வெறும் செய்தி வெளியிடுவது மட்டுமல்ல.

ஒரு கலைஞனின் முயற்சிக்கு வெளிச்சம் கொடுப்பது.

அவனுடைய பெயரை இன்னும் சிலரிடம் கொண்டு சேர்ப்பது.

அவன் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உருவாகச் செய்வது.

அதைத்தான் அவர் செய்தார்.

“திருமணம் எனும் நிக்காஹ்” திரைப்படத்தின் இயக்குநர் சகோதரர் அனீஸ் அவர்களுடனான எனது அறிமுகத்திற்கும் அவர் ஒரு பாலமாக இருந்தார்.

இன்று திரும்பிப் பார்க்கும்போது புரிகிறது.

ஒரு கலைஞனின் ஆரம்பப் பயணத்தில் கிடைக்கும் ஒரு சிறிய அறிமுகம்கூட, பின்னாளில் மிகப் பெரிய வாய்ப்பாக மாறிவிடலாம்.

எனக்குக் கிடைத்த சில கதவுகளுக்குப் பின்னால் அண்ணன் பாஸ்கரனின் உதவி இருந்தது என்பதை நான் ஒருபோதும் மறக்க முடியாது.



“என் மகனை வைத்து ஒரு படம் செய்கிறேன்…”

காலம் நகர்ந்தது.

ஒருநாள் அவர் தனது மகனை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கத் தொடங்கினார்.

அப்போது என்னை அன்புடன் அழைத்தார்.

“என் மகனை வைத்து ஒரு திரைப்படம் செய்கிறேன். அந்த நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும். அதில் உங்கள் பாடலும் இருக்க வேண்டும்.”

அந்த அழைப்பு எனக்கு ஒரு சாதாரண அழைப்பாகத் தோன்றவில்லை.

ஒரு கலைஞனாக என்னை அவர் மதிக்கிறார் என்பதன் வெளிப்பாடாகவே அதை உணர்ந்தேன்.

அந்த அன்புக்காகவே நான் ரீச்சா பார்க் சென்றேன்.

என்னுடைய நண்பரும் வகுப்புத்தோழருமான பொத்துவில் பாயிஸ் அவர்களுடன் அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அந்த இரண்டு நாட்களும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவமாக மட்டும் இருக்கவில்லை.

ஒரு மனிதனை நெருக்கமாகப் புரிந்துகொள்ளக் கிடைத்த நாட்களாக அமைந்தன.



ஒரு தொழிலதிபருக்குள் இருந்த இன்னொரு மனிதர்

ரீச்சா பார்க்.

பரந்து விரிந்த இயற்கை.

மரங்கள்.

செடிகள்.

பழங்கள்.

விவசாயம்.

சுற்றுலா.

மனிதர்களின் உழைப்பு.

அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தபோது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் ஒன்று.

அங்கிருந்த மரங்கள், செடிகள், பழங்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் பாஸ்கரனுக்கு தெரிந்திருந்தது.

அது வெறும் ஒரு தொழில் நிறுவனத்தை நடத்தும் மனிதனின் பார்வையாக எனக்குத் தெரியவில்லை.

தான் உருவாக்கிய ஒன்றை உயிரோடு நேசிக்கும் ஒருவரின் பார்வையாகவே தெரிந்தது.

அங்கு பணியாற்றியவர்களுடன் அவர் பழகிய விதத்தையும் கவனித்தேன்.

அவரைச் சுற்றியிருந்த பலர் அவரை ஒரு முதலாளியாகப் பார்ப்பதைவிட, ஒரு அண்ணனாகவே பார்த்தார்கள் என்பதை உணர முடிந்தது.

அவருடன் நேரில் பழகியவர்களுக்குத்தான் அவருடைய இயல்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று அப்போது நினைத்தேன்.

இன்றும் அதே எண்ணம்தான்.



அந்த ஒரு மணி நேரப் பயணம்…

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அந்தத் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுக்காக ரீச்சா பார்க்கிலிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

ஒரு வாகனத்தில் திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பயணம் செய்தோம்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது பாஸ்கரன் என்னை அழைத்தார்.

“நீங்களும் அவருடன் வாருங்கள்.”

அது ஒரு சிறிய வாக்கியம்.

ஆனால் ஒரு கவிஞனுக்கு அதன் அர்த்தம் மிகப் பெரியது.

அந்த ஏற்பாட்டின் மூலம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்து பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஒரு கவிஞனாக எனக்குக் கிடைத்த அந்த நேரமும், அந்த மரியாதையும் என் மனதில் என்றும் நிற்கும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி சில நேரங்களில் பணமாக இருக்காது.

சரியான மனிதரிடம் நம்மை அறிமுகப்படுத்துவதுதான்.

அந்த உதவியை அண்ணன் பாஸ்கரன் எனக்கு பலமுறை செய்திருக்கிறார்.



ரீச்சா பார்க்… ஒரு இடமல்ல, ஒரு கனவு

இவ்வளவு பெரிய வளாகம்.

இவ்வளவு பரந்த இயற்கை அமைப்பு.

இத்தனை ஆண்டுகளின் உழைப்பு.

இவை எதுவும் ஒரே நாளில் உருவானவை அல்ல.

அதற்குப் பின்னால் எண்ணற்ற உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

கனவு இருந்திருக்க வேண்டும்.

முதலீடு இருந்திருக்க வேண்டும்.

அர்ப்பணிப்பு இருந்திருக்க வேண்டும்.

அந்த இரண்டு நாட்களில் அவற்றின் சில தடங்களை நான் பார்த்தேன்.

என் பார்வையில் ரீச்சா பார்க் இன்று ஒரு இடம் மட்டுமல்ல.

நாளைய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கனவு.

இன்னும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இது ஆசியாவின் முக்கியமான சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வடபுலத்தில், நம் மண்ணில், இத்தகைய ஒரு பெரிய சுற்றுலா மற்றும் இயற்கைத் திட்டத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல.

அதற்குக் கனவு வேண்டும்.

அதைவிட அதிகமாக உழைப்பு வேண்டும்.

அதையும் தாண்டி விடாமுயற்சி வேண்டும்.

அந்த மூன்றையும் நான் கந்தையா பாஸ்கரன் அவர்களிடம் பார்த்தேன்.



ஒரு மனிதனைப் புரிந்துகொள்ள…

வாழ்க்கையில் ஒருவரை மதிப்பிடுவதற்கு அவரைப் பற்றிய கருத்துகளை மட்டும் கேட்பது போதாது.

அவருடன் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும்.

அவருடன் அமர்ந்து பேச வேண்டும்.

அவருடன் பணியாற்றும் மனிதர்களைப் பார்க்க வேண்டும்.

அவருடைய கனவின் பின்னால் இருக்கும் உழைப்பைப் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் ஒரு மனிதனை ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும்.

இன்று அவரைப் பற்றி பல்வேறு கருத்துகள் எழுதப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வை இருக்கலாம்.

அந்தக் கருத்துகளை மறுக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால் நான் பார்த்த உண்மையைச் சொல்லாமல் இருப்பதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை.

எனக்கு உதவிய ஒருவரைப் பற்றி, அவர் ஒரு சிரமமான காலகட்டத்தை எதிர்கொள்ளும்போது நான் மௌனமாக இருப்பது என் மனசாட்சிக்கு சரியாக இருக்காது.

நான் யாருக்காக நிற்கிறேன்?

நான் அவருடைய அரசியலுக்காக நிற்கவில்லை.

அவருடைய பணத்திற்காக நிற்கவில்லை.

எந்தப் பதவிக்காகவும் நிற்கவில்லை.

ஒரு காலத்தில் ஒரு தொலைபேசி அழைப்பில் என்னை வாழ்த்திய மனிதருக்காக…

என் கலைப் பயணத்தின் ஆரம்பத்தில் என்னை பலரிடம் அறிமுகப்படுத்திய மனிதருக்காக…

என் பாடல்களுக்கு ஊடக வெளிச்சம் கொடுத்த மனிதருக்காக…

என்னை ஒரு சகோதரனாக மதித்த மனிதருக்காக…

ஒரு கவிஞனாக எனக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையை வழங்கிய மனிதருக்காக…

ஒரு நன்றியுள்ள மனிதனாக நான் இன்று அவருக்காக நிற்கிறேன்.

அவ்வளவுதான்.

பொத்துவில் அஸ்மின்

25/07/2026

**அன்று சூரியனை நான் தேடிச் சென்றேன்…
இன்று சூரியன் என்னைத் தேடி வந்திருக்கிறது.**

இலங்கையின் முன்னணி வானொலியான சூரியன் FM, தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சூரியன் FM-இல் அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவோடு அதன் வாசலை நேர்முகத் தேர்வுக்காகத் தட்டினேன். அந்த நாள் என் கனவு நிறைவேறவில்லை.

வானொலியைக் காதலித்த நான், பின்னாளில் தொலைக்காட்சியைக் கரம் பிடித்தேன்.

1997 ஆம் ஆண்டு, ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோதே கவிதைகளோடு கைகுலுக்கத் தொடங்கினேன். 2008 முதல் முறைப்படி பாடல்கள் எழுதத் தொடங்கினேன். 2012-ஆம் ஆண்டு வாழ்க்கை என்னை வேறொரு பாதையில் அழைத்துச் சென்றது. அந்தப் பாதை என்னை தமிழ்த் திரையுலகில் ஒரு பாடலாசிரியனாக அடையாளப்படுத்தியது.

இன்று, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே சூரியன் என்னை நேர்காணலுக்காக அழைத்திருக்கிறது.
அன்று சூரியனை நான் தேடிச் சென்றேன்…
இன்று சூரியன் என்னைத் தேடி வந்திருக்கிறது.

என் முதல் திரைப்படமான “நான்” படத்தில் இடம்பெற்ற “தப்பெல்லாம் தப்பையில்லை” என்ற என் முதல் திரைப்படப் பாடலை, இலங்கை ரசிகர்களுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை சூரியன் FM-க்கே உரியது.

அதன்பிறகு, என் “ஐயோ சாமி” பாடலை தமிழ் சினிமாவின் முன்னணி பாடல்களோடு இணைத்து Top Twenty நிகழ்ச்சியில் ஒலிக்கச் செய்து, என்னை மேலும் பல நேயர்களிடம் கொண்டு சென்றதும் சூரியன்தான்.

இன்று, சூரியன் FM தனது 28-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், “சூரியனே எழுந்துவா” என்ற சூரியன் FM-இன் புதிய நிலையக் குறியீட்டுப் பாடலை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இன்றுமுதல் அந்தப் பாடல் சூரியன் FM-இல் ஒலிக்கத் தொடங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பாளராக வேண்டும் என்று கனவு கண்டவன் நான், இன்று அந்த வானொலியின் அடையாளக் குரலாக என் வரிகள் ஒலிப்பது, இறைவன் எனக்குக் கொடுத்த அரிய பரிசாக கருதுகிறேன்.

ஒரு மனிதனின் பயணத்தில் வெற்றி மட்டுமல்ல; வழிகாட்டிய கரங்களும் மறக்க முடியாதவை.

என் கலைப் பயணத்தில் அழியாத ஒரு தடத்தைப் பதித்திருக்கும் சூரியன் FM-க்கும், அதன் நிர்வாகத்திற்கும், அறிவிப்பாளர்களுக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், உலகெங்கும் வாழும் நேயர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், இனிய 28-வது பிறந்தநாள் நல்வாழ்த்துகளும்!

“அடுத்தவனின் தத்துவத்தைப் பேசிப் பேசி
அடுப்படியில் தூங்காதே.
உலகம் போற்றும்
உனக்கான தத்துவத்தை நீயே பாடி,
உறுதியோடு போரிடுவாய்;
ஒருநாள் வெல்வாய்!”

அன்புடன்,
பொத்துவில் அஸ்மின்

16/07/2026
07/07/2026

மர்ஹூம் எஸ்.எஸ்.பி. அப்துல் மஜீத் நினைவில் எழுந்த பாடல்: புதல்வர்களை கண்கலங்க வைத்த பொத்துவில் அஸ்மின் மறைந்த ம....

20/06/2026

இலங்கையில் உருவாகும் ‘ராவண மகன்’ – கொழும்பில் பிரமாண்ட தொடக்க விழா

Address

Chennai
600024

Alerts

Be the first to know and let us send you an email when Boomerang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Boomerang:

Shortcuts

Share