03/09/2026
"யாரும் ஓடிப்போக கூடாது" என்று கேலி பேசி விட்டு, அவரே ஓடிப்போன கேளிக்கை தான் இன்று அனைத்து ஊடகங்களிலும் முக்கிய காமடி செய்தி ஆகிறது.
ஆனால்...
ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி ஆட்சி நடத்திக் கொண்டு... 1200 கோடிக்கு 3வதாக எதற்கு மற்றொரு புதிய சட்டபேரவை & தலைமைச் செயலகம்..?! இந்த சீரியஸ் செய்தி முக்கியத்துவம் பெறாமல் போனது.
வேண்டுமானால்...
ஏற்கெனவே... கலைஞர் ஆட்சியில்... மிகப் பெரிதாக... அதிக வசதிகளுடன்... நவீன கட்டமைப்புடன்... ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் புதிய இரண்டாவது தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாக கட்டிடம் ஒன்று... 2010 ஆம் ஆண்டு 1200 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
2010 மார்ச் முதல்... 2011 தேர்தல் காலம் வரை அங்கேதான் சட்டபேரவை & தலைமைச் செயலகம் நடந்தது. அங்கே தான் தலைமைச் செயலகம் இயங்கியது.
2011 மே மாதம் ஆட்சி மாறிய பிறகு... கலைஞர் ஆட்சியில் அண்ணா சாலையில்... சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து ஆட்சி செய்ய மாட்டேன் என்று அகம்பாவ ஆணவம் கொண்டு அதை மருத்துவமனையாக மாற்றிவிட்டு மீண்டும்... இடப்பற்றாக்குறை மற்றும் வசதியற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே குடி மாறினார்... ஜெயலலிதா.
அன்று எதற்காக இரண்டாம் சட்டப்பேரவை & தலைமைச் செயலகம் கட்டப்பட்டதோ... அதை நீங்கள் எடுத்துக் கொண்டு... செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மருத்துவமனையாக இன்று மாற்றி விடுங்களேன்..?!
எதற்காக வீண் வெட்டி தண்டத்திற்கு மக்களின் வருமானத்தில் மூன்றாவதாக ஒரு சட்டபேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டப் போகிறீர்கள்..?!.....