Nellai shankar

Nellai shankar This page is to review Tamil movies , political analysis , current affairs of Tamilnadu in Tirunelveli (Nellai) colloquial language.

Being a Nellai born person , I always proud to be a TN72 guy.

ஒருமுறை இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, சிவாஜி குறித்து நலம் விசாரித்துள்ளார். தம்பியின் ந...
28/04/2026

ஒருமுறை இயக்குனர் கே.சங்கர் எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, சிவாஜி குறித்து நலம் விசாரித்துள்ளார். தம்பியின் நடிப்பை மிஞ்ச தமிழ் சினிமாவில் ஆள் இல்லை. ஆனால் யார் எது சொன்னாலும் அப்படியே நம்பி விடுவார் என்று எம்.ஜி.ஆர் சொன்ன, என்ன இப்படி சொல்றீங்க என்று கே.சங்கர் கேட்டுள்ளார். இதற்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன். இப்போது சிவாஜி தஞ்சாவூரில் தியேட்டர் கட்டிக்கொண்டு இருக்கிறார்.

சாந்தி – கமலா என்ற இந்த தியேட்டரை நான் தான் திறந்து வைக்க வேண்டும் என்று என்னிடம் தேதியும் சொல்லிவிட்டார். இப்போது பாருங்கள் என்று சொல்லி, சிவாஜிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர், நான் தான் பேசுகிறேன் என்று சொல்ல, சிவாஜி சொல்லுங்க அண்ணே என்று கூறியுள்ளார். அப்போது, தம்பி தியேட்டர் திறந்து விழா அன்று டெல்லியில் ஒரு மாநாடு இருக்கிறது. அதனால் தியேட்டர் திறக்க என்னால் வர முடியாது என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட சிவாஜி, என்ன அண்ணே உங்களை நம்பித்தான் தேதி குறித்திருக்கிறேன். இப்போது இப்படி சொன்னால் எப்படி அண்ணே, நான் உங்களை போக விட மாட்டேன். நீங்கள் தியேட்டர் திறக்க வந்தே ஆக வேண்டும் என்று சொல்ல, என்னை போக விடாமல் தடுக்க என்ன செய்வாய் என்று எம்.ஜி.ஆர் கேட்க, உங்கள் காரின் குறுக்கே படுத்துவிடுவேன் என்று சிவாஜி கூறியுள்ளார். நான் காரில் போகவில்லை. ப்ளைட்டில் போகிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.

இதை கேட்டு கொஞ்சம் இருங்க என்று போனை கட் செய்த சிவாஜி, அரைமணி நேரம் கழித்து அண்ணே, நான் ஏர்போர்ட்டில் உங்களை தேடிவிட்டேன் நீங்கள் அங்கு இல்லையே என்று சொல்ல, நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். மீண்டும் கார் மூலமாக பெங்களூர் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்படுகிறேன். நீ ஒன்று செய் வீட்டுக்கு வா பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சிவாஜி உடனயாக எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அண்ணே உங்களை கேட்டு தானே தேதி குறிச்சேன் இப்போது இப்படி சொன்ன எப்படி, என்று கேட்க, தியேட்டரை விட மாநாடு முக்கியம்பா என்று எம்.ஜி.ஆர் சொல்ல, அருகில் இருந்த கே.சங்கர் சிரித்து காட்டி கொடுத்துவிடுகிறார். அதன்பிறகு என்ன இது உங்களுக்குள் இருக்கு விளையாட்டு என்று சங்கர் கேட்க, நான் அரசியலில், வந்துவிட்டதால், ஏகப்பட்ட டென்சன். அதனால் சினிமா நினைவுகள் வரும்போது இப்படி எதாவது செய்ய வேண்டும்.

அப்படி விளையாட வேண்டும் என்றால் எனக்கு சமமான ஆள் வேண்டுமே தம்பியை விட்டால் திரைத்துறையில் சமமான ஆள் யார் இருக்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்க, நீ் நடிகர் திலகமா இருந்தாலும் உன்கிட்டையே எப்படி நடித்தேன் பார்த்தியா என்று எம்.ஜி.ஆர் விளையாட்டுத்தனமாக கேட்டு கணேசனை கட்டி பிடித்தார்.

முகநூல் பதிவு - பிரசாந்த்!

கடந்த ஆண்டு தமிழ் பு்த்தாண்டன்று இந்த கோவில் நிர்வாகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான “தோரணமலையான்” விருது பெற்றதை எண்ணி...
25/03/2026

கடந்த ஆண்டு தமிழ் பு்த்தாண்டன்று இந்த கோவில் நிர்வாகம் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான “தோரணமலையான்” விருது பெற்றதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்

நெல்லை ஜில்லா நம்ம தென்காசில கடையம் பக்கத்துல இருக்குற தோரணமலை முருகன் கோயில பத்தி முக்கியமான பல தகவல் , இதை படிச்சிட்டு கோவிலுக்கு போங்க ... இன்னும் பக்தி கூடும் ..ம்ம்ம்

• வல்லப விநாயகர்: மலையேறி நடக்க முதலில் இவரை கும்பிடனும், இவாள் தான் என்ட்ரி.

• பாலமுருகன் சன்னதி: மலை ஏற முடியாத பெருசுக, குழந்தைங்க கீழயே கும்பிட பாலமுருகன் இருக்காப்ல

• பிற சன்னதிகள்: கன்னிமார் அம்மன், நவகிரகம் , வியாழ பகவான், சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி ன்னு தனித்தனி சன்னதிக இருக்கு.

• 1200படிகள்: இந்த மலைக்கோயிலை அடைய சுமார் 1000-க்கும் மேல அதுவும் செங்குத்தான படிக மேல ஏறித்தான் போவனும், அங்கங்க ரிலாக்ஸ் பண்ண மண்டபங்கள் மலைல இருக்கு ..

• மூலிகைக் காற்று: இம்மலை முழுக்க மருத்துவ குணமிக்க மூலிகைக நிறைய இறக்குறதுனால அந்த காத்தை சுவாசிக்கும் போது நோய் நொடிக தீர்ந்து போறத நம்பிக்கை.

• குகைக்கோயில்: மலையின் உச்சியில நம்ம ஆளு முருகப்பெருமான் ஒரு குகைக்குள்ள வேல் ஏந்தி கிழக்கு பாக்க ஜம்முன்னு நிக்காரு

• சுனைகள் (Natural Springs): தோரணமலையில மொத்தம் 64 சுனைக (இயற்கை நீரூற்றுகள்) இருப்பத சொல்றாங்க, இதுல முருகர் சன்னதிக்கு பக்கத்துல இருக்குற வற்றாத சுனை நீர் ரொம்ப புனிதமானது. இந்த நீரைக் கொண்டுதான் ஐயாவுக்கு தினமும் அபிஷேகம் ம்ம்ம்ம் ....

• பத்திரகாளியம்மன் சன்னதி: முருகர் சன்னதிக்கு எதுத்தாப்ல, மலை உச்சி விளும்புல பத்திரகாளியம்மன் தனியா இருக்காப்ல, முருகனை பாக்கும் முன்ன அம்மாவ தான் முதல்ல பாக்கணுமாம் ....ம்ம்ம்

• அகத்தியர் மற்றும் தேரையர் வாழ்ந்த இடம்: சித்தர்களில் முதன்மையான அகத்தியரும் அவரது சீடர் தேரையர் இந்த மலையில தங்கி மருத்துவ ஆராய்ச்சி செஞ்சதாகவும், உலகில முதல் கபால அறுவை சிகிச்சை (Brain Surgery) இங்கதான் நடந்ததாகப் புராணங்கள் கூறுவத சொல்றாங்க ...

• தேரையர் ஜீவசமாதி: அகத்தியரோட சீடரான தேரையர் சித்தர் இந்த மலையில ஒரு பகுதியில் ஜீவசமாதி அடைஞ்சதா நம்படுத்து ப்போ ....

• யானை வடிவம்: தூரத்திலிருந்து பாக்கும்போது இந்த மலை யானை படுத்து இருக்குறமாதிரி (வாரணம்) இருக்கறதுனால ‘வாரணமலை’ ன்னு பேரும் உண்டு ...

• இரு நதிகள்: மலையைச் சுத்தி மாலை மாதிரி இங்கிட்டு (வலது ) ராமநதி, அங்கிட்டு (இடது) ஜம்புநதி ஓடுது மலையின் உச்சியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைய பாக்குறப்போ ...ஐயோ அதை ஏன் கேக்கிய ..போயி பாருங்க புரியும் .... அழகு அழகு ...

thanks to கம்பிளி கிராமம் / Kambley Village

07/03/2026

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

09/01/2026

100% உண்மை !

29/11/2025

One of the best videos I have ever seen ! ❤️

தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி  ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும்  எவ்வளவு கடன் வைத்துள்ளே...
20/11/2025

தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை உயிலில் எழுதிய #செக்கிழுத்த_செம்மல்_வஉசி அவர்களின் நினைவு தினம் . , வ..உ .சி.யின் உயில் #செ.திவான் #

வ.உ.சி.யின் உயில் :-

தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீஅ.செ.க. கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு தூத்துக்குடியிலிருக்கும்
வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிக்கொடுத்த உயில் சாசன நிருபம்.

அன்பார்ந்த ஐயா, நமஸ்காரம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை
தேசாபிமானிகள் சிலரையும் தவிர இவ்வுலகத்தில் வேறு தஞ்சம் ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.நான், இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழி இல்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கல் முன்னின்று என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியஙளையும் இதன்கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியஙளை செய்து முடித்துக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்றி
அருளும்படியாகத் தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது சொத்துக்கள் :-

எனக்கும் எனது மூத்த மகன் ஆறுமுகம் பிள்லைக்கும் பாகவிஸ்திரமாகி பல வருஷங்களாகின்றன. அதே தஸ்தாவேஜு என் மனைவியிடமிருக்கின்றது.

பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும் எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கின்றேன்.ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறுக்கு மேல் எனக்கு இலாபம் ( Profits ) கிடைக்கக்கூடும். ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறு கடன் வாங்கி இருக்கிறேன்.கடனுக்கும் இலாபத்திற்கும் அனேகமாக சரியாய்ப் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியமும் கட்டப்படவில்லை.
அது கட்டப்பட வேண்டும்.மேற்படி இரண்டு இன்ஷுரன்ஸ் தொகையையும் பல வருஷங்களுக்கு முன்பெ என் மனைவி பேருக்கு டிரேன்ஸ்பர் செய்து வைத்திருக்கிறேன். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகைகள் தவிர என் ஓட்டப்பிடாரத்து (பிறந்த இடம் )
எனது பெரிய புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும் பதினாறு மரக்கால் நஞ்சையும் அதன் பக்கத்தில் கிணற்ருத் தோட்டம் என்ற ஒரு நிலமும் இருக்கின்றன. இது தவிர ஓட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று 3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் இருக்கின்றன. என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ல அந்த இரண்டு
புஞ்சைகளையும் பயிர் செய்து கொள்ல முடியாது. அவற்றை ரூபாய் ஐந்நூறுக்குத் தங்கள் பேருக்குக் கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலைமையில் இருக்கின்றன. மேற்படி மச்சைப் பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் மூன்றடி உயர்த்தி தேக்கு மரக்கட்டை போட்டும் மேல் பக்கமுள்ள இரண்டு சன்னல்களுக்கு நேராகக் கீழ்ப் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்தும் அரைவீட்டை எடுத்து விட்டும் தாங்கள் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தபின் அவ்வீட்டில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் ரூபாய் எழுநூர்ரைம்பதுக்கு என் மனைவி பேருக்கு ஒரு அடமான தஸ்தாவேஜ் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அடமானச் சொத்துக்கள் சுமார் இரண்டாயிரத்துக்கு விலைபோகும். என் மனைவி அடமான தஸ்தாவேஜை தங்கள் பேருக்கு மேடோபர் வாங்கிக் கொள்க. அதற்கு வசூலாகும் தொகையையும் மேலே கண்ட என் புஞ்சைக்கிரயம் ரூபாய் ஐந்நூறும் அவசியமானால் என் மைத்துனன்மார் குடும்பத்திலிருந்து என் குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய ரூபாய் 1500-ம் தங்களிடம் பற்றி வருகிற தொகைக்கு ஈடு செய்து கொள்க. இப்பொழுதும் ரூபாய் இருநூறு விலை போகக்கூடிய சட்டப் புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன. அவற்றை விற்க வேண்டும்.

எனது கடன்கள்:-

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்துமாத வீட்டு வாடகை ரூபாய் 135/-

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூபாய் 30/-வன்னியஞ்செட்டியார் எண்ணெய்க் கடைக்கு சுமார் ரூபாய் 30/-இன்ஸ்பெக்டர்பிள்ளைக்கு ரூபாய் 20/-
சோமநாத்துக்கு ரூபாய் 16/-வேதவல்லிக்கு ரூபாய் 50/- ஆக, மொத்தம் ரூபாய் 86/-

எனது தம்பி மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவசரக் காரியம் ருதுவாயிருக்கிற என் மக்களிருவரில் மூத்தவளாகிய செள்பாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். சரியான மாப்பிள்ளை கிடையாததால் தாமதம். இப்போது சுமார் ஐந்நூறுக்கு அவளிடத்தில் நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐந்நூறுக்கு அவளுக்கு நகைகள் போடவேண்டும். கலியாணப் பந்தல் செலவு, ஒரு வருஷத்து சீர் சீராட்டு செய்யவும் வேண்டும். அவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூரன்ஸ் பணம் 1000-ம்
சரியாய்ப் போகும்.செள்பாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடாத்தி வைக்கலாம். அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளைச் சேர்த்து ரூபாய் ஆயிரத்துக்கு நகை போடவேண்டும்.ஒரு வருஷத்துக்கு சீர் சீராட்டும் செய்யவேண்டும்.அவற்றிற்கு மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூபாய் 100-மும் சரியாய்ப் போகும். என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகள் எல்லாம் தாங்களே வாங்கி வைத்திருந்து கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற கரண் டிபாஸிட் வட்டி போட்டுக் கொடுத்து வர வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுடைய அன்னவஸ்திர கல்விச் செலவுகளுக்கு யாதொரு ஐவ்கமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயலுகிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இர்ண்டு தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் மைத்துனன்மார் காரியம்:-

வீரபாண்டியன் பட்டணம் பூபாலராயன் இடமிருந்து ரொக்கமே வாங்க வேண்டும். சொத்து ஒன்றும் வாங்கக் கூடாது. திருச்செந்தூர் உண்டியல் கடை சரசிணை ஐயர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மாத்திரம் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தால் அவரிடமிருந்து என் மைத்துனன்மார் அடமானத்தை விடுதலை செய்து தஸ்தாவேஷ் எழுதி ரிஜிஸ்டர் செய்து வாங்க வேண்டும். அவர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறுக்குச் சம்மதிக்காவிட்டால் அவர் நம்பர் போட்டுக் கொள்ளும்படி விட்டு விடவேண்டும். என் மைத்துனன்மார் சகோதரியாகிய செள்பாக்கியவதி ஆறுமகத்தம்மாளுக்கு நகைப் பாவத்து வகைக்குக் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐந்நூறு அவள் இஷ்டப்படி ரொக்கமாகவோ, நகையாகவோ கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது. என் மைத்துனன்மார்கள் பெரும் செலவாளிகளாய் இருக்கிறபடியால் பாக்கித் தொகையில் யானையப்ப பிள்ளை சத்திரத்துப் பக்கத்தில் மரக்கால் ஒன்றுக்கு ரூபாய் நூறு விலைக்கு நல்ல நஞ்செய் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் மூன்று கோட்டை விரப்பாடு தங்கள் பேருக்குக் கிரயத்திற்கு வாங்கி அவற்றையும் பாக்கித் தொகையும் என் மைத்துனன் மூவரும் மூன்று பங்கு வைத்து தங்கள் மனைவி மக்களுடன் அவர்கள் யாதொரு வில்லங்கத்திற்கும் உள்படுத்தாமல் அனுபவித்துக் கொள்ளும்படிக்கும் அவர்கள் மக்கள் மெஷர் ( மேஜர் ) அடைந்தபின் அவர்கள் சர்வ சுதந்திர பாத்தியமாக அனுபவித்துக் கொள்ளும்படி தாங்கள் அவர்களுக்கு நன்கொடை தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுக்கவேண்டும். என் பெரிய மைத்துனன் சுப்பிரமணிய பிள்ளை ஒருக்கால் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லையானால் அவன் பாகச் சொத்துக்களை அவனுடைய சகோதரர் இருவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து நன்கொடை தஸ்தாவேஜில் எழுதி வைக்க வேண்டும். ஆனால் எனது பெரிய மைத்துனன் தனது வீட்டை வில்லங்கம் செய்யாத காலம் வரையில் அவன் அன்னவஸ்திரச் செலவிற்கு அவன் பாகச் சொத்துக்களிலிருந்து மற்றைய இருவரும் நபர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து வீதம் மொத்தம் ரூபாய் பத்து மாதந்தோறும் கொடுத்து விட வேண்டும். திருச்செந்தூர் வீடுகளில் தெற்கு வீடு சுப்பிரமணியத்திற்கும், வடக்கு வீடு வெங்கிடாசலத்திற்கும் சேர வேண்டும். வடக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள காலி மனைதான் மைனர் குஞ்சரத்திற்குச் சேரக்கூடியதாக இருக்கிறது. வடக்கு வீட்டையும் தெற்கு வீட்டையும் கிரயம் போட்டு தேற்கு வீட்டிற்குப் போகும் கிரயத்தில் அதிகப்படும் தொகையை வெங்கிடாச்சலத்திற்கும் சுப்பிரமணியன் சொத்துக்களிலிருந்து கொடுக்க வேண்டும். குஞரம் வீடு கட்டுவதற்கு இவ்வளவு என்று இப்பொழுதே தீர்மானித்து மற்றைய இருவரும் அவருக்குச் செலுத்திவிட வேண்டும். 19 பனை புஞ்சையையும் சமமாகப் பங்கிட்டு மூன்று பேருக்கும் கொடுத்துவிட வேண்டியது. மைனர் குஞ்சரத்திற்குக் கார்டியனாக வெங்கிடாச்சலத்தையும் மேற்படியார் அத்தான் சண்முகம் பிள்ளையை நியமித்து அவனுடைய வரவு செலவுகளுக்குச் சரியான கணக்கு வைத்திருந்து அவன் மெஷ்ரடைந்த ( மேஜர் ) பின் சொத்தையும் கணக்கையும் அவனிடம் ஒப்படைக்கும் படியாக நன்கொடை தஸ்தாவேஜில் எழுத வேண்டும். பூபாலராயரிடமிருந்து தொகை பூராவும் வசூலாகிவிட்டால் அவருக்குத் தாங்களும், நான் ..... ( இந்த இடத்தில் ஒரு வரி சிதிலமடந்துள்ளது ) ரூபாய் 1500-ம் நான் என் மைத்துனன்மார் குடும்பத்திற்குச் சென்ற பத்து வருஷமாகப் பாடுபட்டு வந்ததற்கு பிரதிபிரயோஜனமாக என் குடும்பத்தாருக்குக் கொடுக்க வேண்டும். பூபாலராயரிடமிருந்து வரவு வந்திருக்கிற தொகைக்கும் பற்றாயிருக்கிற தொகைக்கும் பேரேட்டுப்படி ஒரு நகல் தயார் செய்வித்துக் கூடிய விரைவில் எனக்குக் கொடுக்கும்படி உத்தரவு செய்க.

இதன் பிரதி ஒன்று என் மனைவியிடமும் மற்றொன்று என் மைத்துனன் வெங்கிடாசலமிடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேற்கண்ட காரியங்கள் எல்லாம் தாங்கள் இனிது செய்து முடித்து அருள்புரிக.

தூத்துக்குடி
26-10-36 வ.உ.சிதம்பரம்பிள்ளை

வரலாற்றாசிரியர் செ.திவான் அவர்கள் எழுதி,
சுஹைனா பதிப்பகம்,
106 F-4A, திருவனந்தபுரம்சாலை,
பாளயங்கோட்டை

19/11/2025

பல்லாங்குழி !

திருநெல்வேலிச் சீமையின் மறுக்க/மறைக்க முடியாத மாமனிதர், இந்திய சுதந்திர போராட்டத்தில் செக்கிழுத்த செம்மல் ,வெள்ளையர்களை ...
18/11/2025

திருநெல்வேலிச் சீமையின் மறுக்க/மறைக்க முடியாத மாமனிதர், இந்திய சுதந்திர போராட்டத்தில் செக்கிழுத்த செம்மல் ,வெள்ளையர்களை எதிர்த்து தன் சொத்துக்கள் அனைத்தையும் வைத்து கப்பலோட்டிய தமிழன் , தன் வாழ்நாளின் கடைசி கட்டத்தை ஏழ்மையுடன் சென்னை புதுப்பேட்டையில் கழித்த உத்தமர் ஐயா.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89வது நினைவு நாளில் அன்னாரைப் போற்றி வணங்குவோம்...



05/09/2025

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது

"மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும்

ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும்.

எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய புஞ்சையில் 2 சங்கிலி நிலமும் 16 மரக்கால் நஞ்சையும் கிணற்று தோட்டமும் இருக்கிறது, இது தவிர ஒட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.75 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, .75 சங்கிலி புஞ்சை ஒன்றும் இருக்கின்றன

என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ள புஞ்சைகளையும் பயிர் செய்ய முடியாது. அவற்றை தங்கள் பெயருக்கு ₹500 கிரயம் செய்து கொடுக்க நினைத்து கொண்டு இருக்கிறேன்.

ஒட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. மச்சை பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் 3 அடி உயர்த்தி தேக்கு தேக்கு மரக்கட்டை போட்டு மேல் பக்கமுள்ள இரண்டு சன்னகளுக்கு நேராக கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்து அரைவிட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்……

இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய சட்ட புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவரச காரியம் என் மகளிருவரில் மூத்தவளாகிய சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்குகலியாணம் செய்து வைக்க வேண்டும் ₹500 க்கு அவளிடம் நகைகள் இருக்கின்றன.

இன்னும் ₹500 க்கு நகைபோட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு ஒரு வருஷத்து சீராட்டு செலவு என ஒரு கம்பெனி பணம் ₹1000 சரியாய் போகும்.

மரகதவல்லி அம்மாளுக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து கலியாணம் செய்து வைக்க வேண்டும் அவளுக்கும் அவளிடம் இருக்கின்ற நகைகளை சேர்த்து ₹1000 க்கு நகைகளை போட வேண்டும் அதற்கு மற்றொரு கம்பெனி பணம் சரியாய் போகும்.

என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகளை தாங்கள் வாங்கி வைத்து இருந்து கோவாப்பிரேட்டிங் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்ட் டிபாஸிட் வட்டி போட்டு கொடுக்க வேண்டும்.

இந்த நிலைமையில் என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை ₹135

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30

வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30

சில்லறை கடன் ₹60

இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20

சோமநாத்துக்கு ₹16

வேதவல்லி ₹50

கடைசியாக நான் கேட்பது எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளை பட்டினி கிடக்காமல் சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்"

உண்மையான சத்திய சோதனையும், நெஞ்சுக்கு நீதியும் இதுதான், இந்த உயில்தான்

“சிறையில் நான் இழுத்தது செக்கு அல்ல, அது பாரதமாதாவின் தேர்” என சொன்ன அந்த அப்பழுக்கில்லா தேசபக்தனின் தியாகத்தின் சின்னமாக நிற்கின்றது இந்த உயில்..

Address

1D2S2 Bala Bhavani Flats
Chennai
600044

Telephone

+919150727772

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai shankar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nellai shankar:

Share