siva kavithai

siva kavithai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from siva kavithai, Poet, Calicut.

என் முகம் காணாத என் இனிய தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் இனிய பணிவான அன்பு நிறைந்த வணக்கம்.... பல ஆண்டுகளாக ஏட்டில் எழுதி வைத்து எத்தனையோ கவிதைகளை எடுத்துறிந்து விட்டேன்.
என் மனதில்தில் தோன்றி உள்ளத்தில் உயிர் பெற்று உணர்வினில் கலந்த அழகிய வரிகள்...

13/12/2024
26/11/2024

கவிதையின் தலைப்பு
சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம் ...

சாதிக்க நினைத்தால் சாதிக்கலாம்
சபதம் எடுத்து வென்றிடலாம்
தேட முயன்றால் தேடலாம்-நீ
தெளிவு பெற்று வாழலாம்

மறக்க நினைத்தால் மறக்கலாம்
மகிழ்ச்சியில் உள்ளம் சிறக்கலாம்
மழலைப் போல் சிரிக்கலாம்-நீ
மகத்துவமாய் வாழ்ந்திடலாம்

ஆள நினைத்தால் ஆளலாம்
அச்சமின்றி வீறு நடை போடலாம்
அமிர்தம் கொண்டு உண்ணலாம்-நீ
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்

வறுமை பல ஒழித்திடலாம்
வலிமையோடு வாழ்ந்திடலாம்
வரலாறு படைத்து வாழலாம்-நீ
வான் உயர செல்லலாம்

உயர நினைத்தால் உயிரலாம்
உன்னத வளர்ச்சியை கணலாம்
உதவி செய்ய முயலலாம் --நீ
உலகம் வியக்க வாழலாம்

எழுச்சிக் கொண்டு எழுந்திடலாம்-
எல்லோரையும் நேசிக்கலாம்
வெல்ல நினைத்தால் வெல்லலாம் - நீ
வெற்றிகள் படைத்து உயர்ந்திடலாம்

-கவிதாசன் சிவா

25/11/2024

கவிதையின் தலைப்பு
இருதி ஊர்வலம்..

பூ உலகிற்கு நாம் ஒரு சுற்றுலா வந்தோம்
பூதங்கள் ஐந்திலும் முழுமதி கண்டோம்
பூத உடல் முடிவில் பூமியில் விதைப்போம் -ஆனாலும்
பூ உலகிற்கு தொடர்ந்து புது பிறவி எடுப்போம்

கரைத் தொடும் அலைகள் கலங்குவதில்லை
காதல் காமம் இல்லாத உயிர்களும் இல்லை
கதிரவன் உதயத்தில் இருளும் நிலைப்பதில்லை
காலனை ஜெயித்த மனிதரும் எவருமில்லை

புவியில் புதிய உயிர்கள் இல்லாமல் நாள் ஒன்று இல்லை
பூத உடல் புதைக்காமல் நாள் ஒன்றும் இல்லை
புகழ்ச்சிக்கு மயங்காதோர் எவரும் இல்லை
புரிந்த மனிதர்கள் யாவரும் கலங்குவதில்லை

அன்பாய் அரவணைத்த கைகளும் எங்கே!
ஆறுதல் சொல்லிய உறவுகளும் எங்கே!
அனைத்தும் சொன்ன நண்பனும் எங்கே!
அதிகாரம் செய்த அனைவரும் எங்கே!

பூங்காற்று புதியதாய் அரவணைக்கும் போதும்
சந்திரன் சற்ஒளி சகஜமாய் தொடரும் போதும்
செவியில் செல்லமாய் இசையுரும் போதும்
சென்றவர் நம் நினைவில் வாழ்ந்திடக் கூடும்

புவியில் பிறந்தது பூமியில் சேர்க
பூவோடு சேர்ந்து பூத உடலும் செல்க
நீண்ட நித்திரையில் ஆன்மா செர்க
நினைவுகளால் இண்ணுயிர் வாழ்க

- கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
கடலும் கடற்கரையும்

அலைகள் மோதி கரையை கடக்கும்
அழகான காட்சி மனதை மயக்கும்
அற்புதமான காற்று கவர்ந்து இழுக்கும்
அமைதியான தருணம் மனதை மயக்கும்

கரையின் மீது காதல் கொண்டு
அலை அலையாய் தொடுகிறாய்
கடற்காற்றின் உப்பு சுவையால்-நீ
கன்னமெல்லாம் முத்தமிடுகிறாய்

நதிகள் அனைத்தையும்
நற் சுவையாய் உண்கிறாய்
கரையின் காதலியை முத்தமிட்டு-நீ
நாணம் கொண்டு சிரிக்கிறாய்

கரையின் மணல் பரப்பில்
காலடி பதித்தது காவியமாய் மனதில்
கதிரவனை கடலில் செங்கதிராய்
காலையில் பார்த்தது ஓவியமாய் மனதில்

நெருடலாய் கடற்காற்று கடந்து செல்ல
நெற்றியில் தென்றல் போல் முத்தமிடுகிறாய்
நெய்தல் மக்கள் மீன்பிடிக்க செல்ல
நெஞ்சமெல்லாம் நினைவு களை பதிக்கிறாய்

- கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
வலி தங்க முடியல

பாசம் வைக்காதே! --என்று
படைச்ச அவ சொல்லலையே!
பழி சொல்லுக்கு ஆளாக்கி-என்னை
பழியிடுவார் என்று தெரியலையே!

எங்கே! நான் சென்றாலும்
என்ன செய்வது என்று புரியலையே! எப்போதும் எதிர்மறை சிந்தனை
என்னை விட்டு விலகலையே!

கனவுகளை சுமக்க வைச்சி
கண்ணாடியா! நொறுங்க வைச்சா! காலனிடம் உயிரை காப்பாற்றி
கண்ணீர் கொண்டு துடிக்க வைச்சா!

அன்புக்காக அடிமைப்படுத்தி
ஆயுள் முழுவதும் அழவைச்சா!
அதிகமாக பாசம் வைக்க வைத்து
அனு அனுவாய் சிதைக்க வைச்சா!

நினைத்து நினைத்து நிமிடம்
நிமிடம் தொடர்ந்து ஏங்கவைச்சா!
நிழல் போல பின் தொடர்ந்து
நித்தம் நித்தம் துடிக்கவைச்சா!

உதவி எதுவும் கிடைக்கமா?
ஊர் ஊரா சுத்த வைச்சா!
உறக்கமே! இல்லாம..
ஊளி போல தேய வைச்சா!

அன்பு காட்ட அம்மாவும்மில்ல! அனைத்தும் சொல்ல அப்பனுமில்ல! அணைத்து கொள்ள அவளுமில்ல! ஆறுதல் சொல்ல யாருமில்ல!

நினைத்து கண்ணீர் விட்டு
நிம்மதியை தேடுகிறேன்
நிறங்கள் மீது கால் பதித்து
நித்திரை தொலைக்கிறேன்

நிறுத்து இறைவா..! நிறுத்து
நின் சோதனை தாங்க முடியல
நிறுத்து இறைவா..! நிறுத்து
நீ கொடுக்கும் வலி தங்க முடியல

முழக்கமிட்டு சொல்கிறேன் இறைவா! முடியல..! வலி தங்க முடியல என்னால...
முடிவாய் சொல்கிறேன் இறைவா!
முடியல..! வலி தங்க முடியல என்னால..

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
மழை

மழையே! நீ வரும் போதெல்லாம்
மண் வாசனை மணக்கிறதே!
மாரியே! நீ பொழியும் போதெல்லாம்
மனசெல்லாம் குளிர்கின்றதே!

விழி மூடி திறக்கும் முன்பே!
விழுந்த இடம் தெரியாமல் மறைகின்றாள்
வீசும் காற்றில் சாரலாய் மழையாய்
விந்தைகள் செய்து வியக்க வைக்கிறாள்

சிப்பிக்குள் இருக்கும் முத்துப்போல்
சிறு துளியாய் விழுகின்றாள்
சிறகடிக்கும் பறவையை போல்
சிரித்து கொண்டே! பொழிகின்றாள்

கருமேகங்களின் வான் மகளாய்
காப்பாற்ற வருகின்றாள்
காடுகளையும் புல்வெளிகளையும்
காதல் கொண்டு காண வருகின்றாள்

வெளிர் வான் மகளின் மேடையிலே!
வெள்ளி தோரணமாய் விழுகின்றாள்
வெப்பத்தை தணித்து குளிர்ச்சியிலே!
வேகமாய் பொழிய வருகின்றாள்

அருவியை பெருக்கி
ஆறாய் பாய்கிறாள்
அணைகளிடம் தங்கி
அனைவருக்கும் உதவுகிறாள்

மலைகளையும் மரங்களையும் குளிர்வித்து
மண்ணின் வளங்களை பாதுகாக்கிறாள்
மழலைப் போல் சிரித்துக் கொண்டே
மானுடர் வாழ்வில் கலக்கின்றாள்

கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவியே!
ஓங்கி உயர்ந்தாய்
ஓவியத்தின் அழகே!
ஒலி எழுப்பி சிரித்தாய்.

காவிரி தாயின் மடியில்
கனிவாய் உறங்கினாய்
கருங்கள் பாறைகளில்
கதறிக் கொண்டாய்

தமிழ்நாட்டுக்கு முதன் முதலாக தருமபுரிக்கு வருகை தருகிறாய் தந்தையைப் போல தருமபுரிக்கு
தாகம் தீர்க்க உதவுகிறாய்

வெண்ணிற ஆடை அணிந்து
வெள்ளி போல் ஜொலிக்கிறாய்
வெளிர் நுரையாய் மிதந்து
வெட்கம் கொண்டு மறைகிறாய்

அருவியின் அழகு ஆனந்தத்தை
அள்ளிக் கொடுக்கும் காவியம்
அழகில் ஐந்தருவி துள்ளல் ஆண்டவனையும் மயக்கும் ஓவியம்

ஓ' வென்று இசை முழக்கம் இட்டே!
ஓடியே! ஒகேனக்கல் வருகின்றாய்
ஒவ்வொரு நாளும் மக்களுடன் மகிழ்ந்து
ஒலி எழுப்பி நீர்வீழ்ச்சியில் சிரிக்கின்றாய்

அருவியின் அழகை கண்டு ரசிப்போம் அற்புதமான காற்றை சுவாசிப்போம் வலை ஒளியில் கவிதை பார்ப்போம் வாழ்த்துக் கூறி விரும்பி பகிருவோம்

- கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
இவள் பேரண்டத்தின் பேரழகி

செந்நிற மேனியை பார்த்து-அந்த செவ்வானமும் சிதைந்து போகும் செவ்விதழ் உதட்டை கண்டு
செம்பருத்தி மலரும் வாடிப்போகும்

மேனகையும் மென்மையை பார்த்து மேகமாய் கலைந்து சேன்றாள்
ஊர்வசியும் அவளை பார்த்து ஊரைவிட்டே ஓடிவிட்டாள்

கன்ன குழி அழகை பார்த்து
கங்கைக்கே! வழிமறக்கும்-அவள்
கரு விழி கருமையை கண்டு
கம்பனுக்கே! கவிமறக்கும்

இந்திரனும் அவள் இடையை பார்க்க இறங்கியே..! வந்து விட்டான்
மன்மதனும் முன்னழகை கண்டு மயங்கியே..! போய்விட்டான்

முப்பாட்டன் வள்ளுவனும் அடிகள் எழுத முயற்சி செய்து முடியாமல் தவித்தாரோ! பேரண்டமே அவளின் பேரழகைப் பார்த்து பேச முடியாமல் பேதழித்து நின்றாரோ!

புருவஅழகை பார்த்து ரசிக்க-சந்திரன் பூலோகம் வந்து இறங்கிவிட்டான்
நளின நடையை பார்த்து விட
நாகேந்திரனும் ஆட தொடங்கிவிட்டான்

ஒட்டுமொத்த அழகை எல்லாம்-பிரம்மன் ஒருத்திக்கே..! கொடுத்திட்டான்
ஓவியமாக அவளைக் கண்டு-ஒளியொன்
ஒளி எழுப்ப மறந்திட்டான்..

பாவையரின் அழகையெல்லாம் இவளுக்கே!
பட்டா போட்டு கொடுத்துட்டான் படைத்தவனே..! அவள் அழகை கண்டு
பார்த்து பல் இழிச்சி நின்னுட்டான்

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
என்னால முடியல...

கண்ணுல கண்ணீர் வந்ததால
கண் இமையே மூடவே! முடியல
காப்பாத்திக்க போராடவும் முடியல காலன்கிட்ட போகவும் தோனல காரணமும் எதுவும் தெரியல...

தமக்கையின் துரோகத்தால
தகவல் எதுவும் கிடைக்கல தன்னந்தனியா வாழவும் முடியல தனிமையாய் இருக்க முடியல ...

சாப்பிடவே! தோனல
சாப்பாடு முழுசா சாப்பிட முடியல
சபதம் எடுத்து வாழவும் தோனல
சாம்பு தொழிலும் செய்ய முடியல...

யாருன்னு யாரும் கேட்கல
யாருன்னு கேட்க நாதியில்ல
யானை பலமும் இல்ல
யாசகர் கிட்ட சேரவும் தோனல...

ஆண்டவன் ஆசியும் கிடைக்கல
அதற்கு தகுதியும் இல்ல
ஆண்டவன் அநீதி இழைச்சதுனால
அன்பு காட்ட யாருமில்ல

தூக்கம் இரவுல வரல
தூக்கம் வந்தா தூங்க முடியல
தூய்மையா எப்போது இருக்க முடியல துறவி போல வாழவும் முடியல...

இனிமையா பேச முடியல
இருப்பிடத்துக்கு போக முடியல
இதை யாரிடமும் சொல்ல தெரியல
இது சொல்லவும் மொழி தெரியல...

ஏமாற்றமே! வாழ்க்கையானதுனால எல்லாத்தையும் ஏத்துக்க முடியல
எனக்கு இப்படி நடந்ததுனால
ஏசவும், ஏமாத்தவும் தோனல
என்னால முடியல...

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
யாரோ ஓருத்தி

என்னை எட்டிப் பார்த்த ஒரு பார்வை
எழிலின் வடிவாக ஒரு பாவை

அடுத்த நாள் சேதாரம் இல்லாத சிலையாய்
அன்று முதல்பாவையின் மீது அலையாய்

கடந்து அவள் போகயில் பூரிப்பு
கடை கண் பார்வையிலே சில்லிர்ப்பு

நான் ரசித்த ஓவியத்தின் உயிர் வடிவம்
அவள் இயற்கையின் எழில் வடிவம்...

அன்று என் பேனா பாவையை நிலா வானம் என்று கிறுக்கியது
அடுத்த நாள் அவளின் அப்பாவின் பேச்சு என்னை சுருக்கியது
அப்போது அவளை பற்றி என் ஆழ் மனதில் தோன்றியது
அடுத்த நாள் எனது என் பேனா அவளின் அழகை பற்றி எழுதியது

கன்ன குழி அழகிலே
களவு செய்து வென்றாய்
கடை கண் பார்வையிலே
காத்திருந்து கொன்றாய்

பார்வையே போதும் புள்ள
பசியும் கூட வந்ததில்ல
விழியழகை பார்க்கையிலே
வீட்டுக்கு போகவும் மனம் இல்ல

நான் பாவையை பற்றி எழுதிய முதல் கவிதையும் அதுதான்
நானே என் மனதில் பாவையை வரைந்த முதல் ஓவியமும் இதுதான்

பார்த்ததை கவிதையை எழுதி நண்பனிடம் சொல்ல!
பாக்யா' புத்தகத்தில் இருந்ததா! என்று அவன் என்னிடம் சொல்ல!
பார்வையை நான் ரசித்தென் என்று இதயத்திடம் சொல்ல!
பாவையால் நான் கவிஞன் ஆனேன் என்று யாரிடம் சொல்ல!

திறந்த விழியை மூடிக்கொண்டு கொண்டேன்
மன வழியை மனக் கண்ணால் திறந்து கொண்டேன்

மூடிய விழிக்கு முடிவில்லா பார்வை...
கண்களால் பேசிய களவு செய்தவள்...
பார்த்து விடும் தூரத்தில் இருந்தும்
பார்க்க முடியாத ஒளி விளக்கு...

விழியால் வயப்பட்டு...
இதயத்தால் இடைப்பட்டு...
மனதால் நினைக்கப்பட்டு....

நிலவில் நடக்கும் மனிதனாய்
நிலவின் வெண் மேகங்களாய்
யாரோ ஒருத்தியாய் அவள் இருந்தாலும்
என்னை கவிஞன் ஆக்கியது பாவை தான்

எங்கே இருப்பாய்
எப்படி இருப்பாய்
என்ற எண்ணம்
எப்போதவது வந்து
செல்வதுண்டு...
யாரோ ஒருத்தியாய்...

- கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
என் தனிமையின் கண்ணீர்

ஊரை விட்டு வந்து நான்
ஊர் ஊரா சுத்துறேன்
உறக்கமே! இல்லாம
உருகி உருகி தேய்கிறேன்...

தனித்தனியா துயரங்களை
தமக்கையை போல தராதேன்னு கேட்கிறேன்
தனிமையே! என்னை சிறிது
தனியா விடுன்னு தவிக்கிறேன்...

எல்லாமே! ஏமாத்திட்டாங்க என்னடா! வாழ்க்கைன்னு துடிக்கிறேன்
எதுவுமே நிலையில்லைன்னு
என்னை நானே! தேத்துறேன்...

கயவர்களின் சூழ்ச்சியால
கண் கலங்கி நிற்கிறேன்.
காலனிடம் கையேந்தமா
கடவுள் கிட்ட வேண்டுறேன்

விதவைப் போல விழியோரம்
விழி நீரா! சிந்துறேன்
விரல் ஒடிந்த எழுத்தர் போல
விம்பி விம்பி அழுகிறேன்...

ஒவ்வொரு நாளும் நான்
ஒருயுகம் போல கடக்கிறேன்
ஒரு உதவியவது கிடைக்காதா- என்று
ஓடி ஓடி தேய்கிறேன்...

அம்பு இல்ல அரசன் போல
அனுதினமும் கொதிக்கிறேன் அடைக்கலம் இல்லா அகதி போல
அங்கும் இங்கும் சுத்துறேன்.

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
என் நண்பனே! எழுந்து நில்!

வாடாத மலர்கள் எதுவுமில்லை
வலியில்ல வாழ்க்கை எதுவுமில்லை வழியில்ல ஊரும் எதுவுமில்லை வருத்தமில்ல மனிதரும் எவருமில்லை

- ஆகவே வாடிவிடாதே!
என் நண்பனே! எழுந்து நில்!

கண்ணீர் சிந்தாத விழி இல்லை
கதிரவன் இல்ல நாளில்லை
கடந்து போகாத துன்பம் எதுவுமில்லை கடக்க முடியாத பாதை எதுவுமில்லை

- ஆகவே கண்ணீர் சிந்தாதே!
என் நண்பனே! எழுந்து நில்!

விழாது நீர்வீழ்ச்சி எதுவுமில்லை
விழாமல் எழுச்சி எதுவுல்லை
தேடாமல் தேனீக்கள் எதுவுமில்லை தேடாமல் புதுமையும் இல்லை

-ஆகவே தோய்ந்துவிடாதே!
என் நண்பனே! எழுந்து நில்!

இலக்கு இன்றி உயர்வும் இல்லை இலக்கணம் இன்றி தமிழ் இல்லை
இரவு இல்ல பகலும் இல்லை
இன்பம் எப்போதும் நிரந்தரமில்லை

-ஆகவே இழந்து விடாதே!
நம்பிக்கையை நண்பனே! எழுந்து நில்!

துயரம் இல்லா வாழ்க்கை இல்லை துன்பமில்லா மனிதனும் இல்லை
தூக்கம் இல்லா கண்களும் இல்லை துல்லியம் இல்லாத தரசுகள் இல்லை

-ஆகவே துவண்டு விடாதே!
என் நண்பனே! எழுந்து நில்!

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
மது

வீதிக்கு வீதி டாஸ்மார்க் கூட்டம்
விழா வைத்து கொண்டாட்டம்
நானும் அதனுடன் சில நாள் ஆட்டம் நாளும் நாளும் வாழ்க்கை திண்டாட்டம்

எதார்த்தமா தொடங்கும் பழக்கம் எப்போதும் குடி என்று இழுக்கும்
குடிக்க குடிக்க மனது குதுகலம் குடும்பமோ! ஆகும் போர்க்களம்

மனதை தூண்டி மதியை மயக்கும்
மங்கை மோகம் போல் அழைக்கும்
மணல் போல குடலை அரிக்கும்
மரணம் சீக்கிரமாக அணைக்கும்

நித்திரையை கொஞ்சம் கொடுக்கும் நிதியை சிறிது சிறிதாய் அழிக்கும் நிம்மதியை பெரியதாய் கெடுக்கும்
நின் உயிரை இறுதியில் கொல்லும்

கண்கள் பார்வை குறைந்ததாம்
கல்லீரல் கரைந்து விட்டதாம்
கணையமும் காணவில்லையாம் காப்பாற்ற யாருமே! இல்லையாம்

துரோகத்தை மறக்க குடித்தேன்
துன்பம் அதிகமானதை மறந்தென் தூக்கத்திற்காக நான் ருசித்தேன் தூய்மையை நான் தொலைத்தேன்

அற்ப சுகம் அதில் நான் கண்டேன்
அநீதி இழைத்ததை நான் மறந்தேன் அனைவரையும் மறக்க சுவைத்தேன் அனைத்தும் அதில் நான் இழந்தேன்

கொடுங்கோலன் மது என்று அறிவாயா?
கொடுந்துயரை மாற்ற முனைவாயா?
கொடும் அவலம் யார் என்று உணர்வாயா-மதுவை
கொன்று அடுத்த தலைமுறையை காப்பயா?

-கவிதாசன் சிவா

24/11/2024

கவிதையின் தலைப்பு
காதலித்து கெட்டு போ!

காதலித்து கெட்டு போ!
காலனையும் கண்டு வா
அன்பு வைத்து அழிந்து போ
அழிந்து போய் மீண்டும் வா

மூளையை மூடி போட்டு வை
தவித்து தவித்து தாடி வை
அறிவை அழித்து வை
அச்சத்தை அணைத்து வை

காத்திருந்து கண்ணீர் விட்டு போ
கண்ணீரில் காவியம் எழுதிட வா
அன்பு வைத்து அவதி பட்டுபோ
அறிவு கெட்டு அழிந்து வா

நிலைகுலைந்து நித்திரை தேய் நினைத்து நினைத்து மாய்

மழலை கொஞ்சி
மழையில் நனை

கண்ணீர் விட்டு அழு
கழுகு போல் மீண்டும் எழு

கோமாளியாய் வேடமிடு
கோ மகனாய் பிறப்பெடு

கம்பனையும் கூப்பிடு
கவிதைகள் கிருகிடு

சிந்தனையில் சித்திரம் வறை
சினம் கொண்டு மறை

உண்மையை மறைக்க கற்று கொள்
ஊரே உமிழும் வாங்கி கொள்

அணு அணுவாய் துடி
செத்து செத்து பிழை

மூச்சு முட்ட காதலி
முடிவு தெரிந்து பேதலி

சீர் கெட்டு சிதை
சிதைந்து சிதைந்து நினை

குறை கூறி குடி
குறிக்கோள் இல்லாமல் மடி

-கவிதாசன் சிவா

Address

Calicut

Website

Alerts

Be the first to know and let us send you an email when siva kavithai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category